உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கண்ணீர்

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனனுக்கு பகவத் கீதையை முழுக்க உபதேசித்துவிட்டு ரதத்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டானாம் கிருஷ்ணன்.யுத்தம் நடந்ததாம். அபிமன்யு இறந்து விட,தன மகனின் சடலத்தை தன ரத்தத்திலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு புலம்பினானாம் அர்ஜுனன்.கப்போது மேற்கூரையிலிருந்து பத்து சொட்டு கண்ணீர் அர்ஜுனனின் தலையில் விழுந்ததாம்.கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.அர்ஜுனன் கேட்டானாம்,''கண்ணா!நான்தான் மகனுக்காக அழுகிறேன்.மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?''என்று.கண்ணன் சொன்னானாம்,''இல்லை,அர்ஜுனா,மனதைத் திடமாக வைத்துக் கொள்வது பற்றி உனக்கு இவ்வள்ளவு நேரம் கீதை உபதேசித்தேனே.அது எவ்வளவு சீக்கிரம் வீணாகி  விட்டது என்றுதான் கண்ணீர் வடிக்கிறேன்,''என்று.
                                            -கண்ணதாசன் சொன்ன கதை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment