உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மகாராணி

0

Posted on : Thursday, June 16, 2011 | By : ஜெயராஜன் | In :

மகாராணி எலிசபெத் ஒரு நாள் அலுவலக வேலையினை நீண்ட நேரம் பார்த்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு தன படுக்கை அறைக்கு வந்தபோது அறையின் கதவு உள்ளே பூட்டியிருந்தது தெரிந்தது. தன கணவர் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த ராணி மெதுவாகக் கதவைத் தட்டினார்.முதலில் பதில் ஏதுமில்லை.மறுபடியும் மெதுவாகத் தட்டினார்.  அப்போது உள்ளிருந்து,''யாரது?''என்று குரல் கேட்டது.ராணியோ,''நான்தான்,''  என்று  பதிலுரைத்தார்.''நான்தான் என்றால்யார்?பெயர் எதுவும் கிடையாதா?''என்று கதவைத் திறக்காமலேயே கணவர் கேட்டார்.''நான்தான்,மகாராணி வந்திருக்கிறேன்,''என்று சொன்னதும்,''இந்த  நடுஇரவில் மகாராணியாருக்கு என் அறையில்  என்ன வேலை?'' என்ற கேள்வி வந்தது.உடனே ராணி சிரித்துக் கொண்டே,''நான்தான் உங்கள் அருமை மனைவி எலிசபெத் வந்திருக்கிறேன் கதவைத் திறங்கள்,''என்று சொன்னதும் அவர் கணவர் புன்னகையுடன் வந்து கதவைத் திறந்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment