உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடவுள் எங்கே?

0

Posted on : Wednesday, June 08, 2011 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி அல்பயாஜித் தனது தவ பலத்தினால் நேரடியாக சொர்க்கம் போனார்.சொர்க்கத்தின் வாயிலில் எண்ணற்ற தேவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினர்.அவர் ஆவலுடன் ''இறைவன் எங்கே?''என்று கேட்டார்.அவர்கள் வியப்புடன் கேட்டனர்,''என்ன,அவர் பூமியில் இல்லையா?''
**********
மொகலாய மன்னன் ஹுமாயுனின் உயிரை,தண்ணீர் மொண்டு ஊற்றும் காவலாளி ஒருவன் காப்பாற்றினான்.அதனால் மனம் மகிழ்ந்த மன்னன்,''உனக்கு என்ன வேண்டும் என்றாலும் கேள்,தருகிறேன்,''என்றான்.அதற்கு அந்தக் காவலாளி,''எனக்கு எதுவும் வேண்டாம்,மன்னா,''என்றான்.''உயர்ந்த பதவி ஏதாவது கொடுக்கட்டுமா?''என்று மீண்டும் மன்னன் கேட்டான்.காவலாளி மிகவும் மரியாதையுடன்,''நன்றி மன்னா,ஆனால் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் இந்தப் பணியை விட புனிதமானது உண்டா?''என்று கேட்க மன்னன் மனம் மகிழ்ந்தான்.
இயன்றதை செய்வது,செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்வது,உள்ளதைக் கொண்டு உவப்பது இவை யாவும் சூபிகளின் பண்பாகும்..
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment