உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தங்க ஓர் இடம்

0

Posted on : Saturday, June 25, 2011 | By : ஜெயராஜன் | In :

சீக்கிய குரு குருநானக் தன புனிதப் பயணத்தின்போது ஒரு நாள் இரவு ஒரு  புனித ஸ்தலத்துக்கு வந்தார்.அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு  புனித மடம் சென்றடைந்தார்.அந்த மடத்தின் தலைவர்,குருநானக்கைப் பற்றி நன்கு அறிந்தவர் இருந்தும் மடத்தில் எந்த அறையும் காலியாக இல்லாததால்  அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தன நிலையை நேரடியாக சொல்ல யோசித்த தலைவர் குருநானக்கிடம் பால் ததும்பி வழியக் கூடிய நிலையில் இருந்த ஒரு கிண்ணத்தை நீட்டினார்.அதன் உட்பொருளை,அதாவது மடம் நிரம்பி வழிகிறது,இடம் இல்லை என்று குருநானக்  மறைமுகமாக சொல்ல வருவதைப் புரிந்து கொண்டார்.குருநானக் சிறிது நேரம் பால் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தார்.பின்னர் தன்னிடமிருந்த மல்லிகைப்பூவிலிருந்து சில இதழ்களைக் கிள்ளி எடுத்து பாலின் மீது போட்டு கிண்ணத்தை மடத்தலைவரிடம் திரும்ப  நீட்டினார்.மடத்  தலைவரும்,வழிய வழிய பால் ஊற்றப்பட்ட கிண்ணத்தில் மல்லிகை இதழ்களைப் போட்டதும் எந்த மாறுதலும் எற்படாததுபோல தன்னை அங்கு அனுமதித்தால் யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்க முடியும் என்று குறிப்பால் உணர்த்தியதைப் புரிந்து கொண்டு அவரை மடத்துக்குள் அனுமதித்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment