உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒரு புதிர்

0

Posted on : Tuesday, June 14, 2011 | By : ஜெயராஜன் | In :

உங்கள் முன் 'ஆரஞ்சு ','ஆப்பிள்','ஆரஞ்சும் ஆப்பிளும்' என்று தனித்தனியாக எழுதி ஒட்டப்பட்ட மூன்று பெட்டிகள் இருக்கின்றன.ஆனால் மேலே எழுதியிருப்பதுபோல உள்ளே பழம் இருக்காது அதாவது ஆப்பிள் என்று எழுதியுள்ள பெட்டியில் ஆப்பிள் மட்டும் தனியாக இருக்காது.ஆரஞ்சோ,அப்பிளும் ஆரஞ்சும் கலந்தோதான்  இருக்கும்.நீங்கள் ஏதாவது ஒரு பெட்டியில் கைவிட்டு ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துப் பார்க்கலாம்.அதைக்கொண்டு மூன்று பெட்டிகளிலும் என்ன பழங்கள் இருக்கின்றன என்று சரியாகச் சொல்ல வேண்டும்.எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்?எந்தப் பெட்டிக்குள் இருக்கும் பழத்தை எடுக்க வேண்டும்?

விடை;''ஆரஞ்சும் அப்பிளும்'என்று எழுதப்பட்டுள்ள பெட்டியிலிருந்துதான் ஒரு பழத்தை எடுக்க வேண்டும்.அதில் ஆப்பிளும் ஆரஞ்சும் கலந்து இருக்காது.ஆப்பிளோ ஆரஞ்சோ ஏதோ ஒன்று தனியாகத்தான் இருக்க வேண்டும்.எடுத்த பழம் ஆப்பிளாக இருந்தால் அதில் முழுக்க ஆப்பிள் தான் இருக்க வேண்டும்.'ஆப்பிள் என்று எழுதப்பட்ட பெட்டியில் ஆரஞ்சு இருக்கும்.ஆரஞ்சு என்று எழுதப்பட்ட பெட்டியில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கும்.
நாம் எடுத்த பழம் ஆரஞ்சாக இருந்தால்,ஆரஞ்சு  லேபில் பெட்டியில் ஆப்பிள்;ஆப்பிள் லேபில் பெட்டியில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment