உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தீவிரம்

0

Posted on : Sunday, June 19, 2011 | By : ஜெயராஜன் | In :

பல்லி ஒன்று பெரிய கட்டெறும்பைப் பிடித்து அது நழுவிப் போய் விடாதபடி  ஒரே கவனத்தில் இருந்தது.அப்போது வேறொரு சிற்றெறும்பு பல்லியின் அருகில் மிக நெருக்கமாக வந்தது.பல்லி என்ன செய்கிறது என்று பார்த்தேன். அந்த சிற்றெறும்பைப் பல்லி கவனிக்கவே இல்லை.பிடிபட்ட பெரிய எறும்பு தப்பி விடக் கூடாது என்பதில் கவனம் இருந்ததால் பக்கத்தில் வந்த சிறிய எறும்பு அதன் பார்வையில் படவில்லை.கவனம் ஒன்றில் தீவிரமாக இருக்குமானால் இன்னொன்றில் எண்ணம் ஈடுபாடு கொள்ளாது.சிந்தனையில் மனம் தீவிரமாக இருக்கும்போது நெருக்கத்தில் இருப்பது கூட நேத்திரத்திற்குப் புலப்படாது. 
**********
உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?
பொறுமை -சோம்பல்
சுறுசுறுப்பு -அவசரம்
நிதானம் -மந்தம்
சிக்கனம் -கஞ்சம்
வள்ளல்தனம் -ஊதாரித்தனம்
உறுதி -பிடிவாதம்
வீரம் -முரட்டுத்தனம்
பணிவு  -கோழைத்தனம்
முன்ஜாக்கிரதை -தயக்கம்
இணக்கம் -ஏமாளித்தனம்
இவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றிதான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment