உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இந்திய தேசியம்

0

Posted on : Friday, November 25, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்று சிலர் கூறுவது போல இந்திய தேசியம் என்பது பிரிட்டிஷ்காரர்கள்  உருவாக்கம் அல்ல.பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்த பல தனித் தேசங்கள் மீது ஒட்டு மொத்தமான ஒரு மேலாதிக்கமாக இருந்ததேயொழிய நாற்பத்து ஏழில் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை பிரிட்டிஷார் இந்தியாவை ஒரே அரசியல் அமைப்பாகவோ,ஏன் ஒரே நிர்வாக அமைப்பாகவோ கூட ஆக்கவில்லை என்பது மிகச் சாதாரணமாக எவரும் வாசித்தறியக் கூடிய உண்மை.உதாரணமாக திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டியதே தவிர மற்றபடி ஒரு தனி
அரசியல்,பொருளியல் தேசமாகவே சுதந்திரம் வரை நீடித்தது.அப்படி பற்பல சமஸ் தானங்கள்  இருந்தன.அதைத்தவிர பிரெஞ்சு,போர்ச்சுக்கல் பகுதிகள் தனி அரசியல் தேசமாகவே நீடித்தன.இந்தியாவை கடைசிவரை ஒரு தேசமாக பிரிட்டிஷார் ஒத்துக் கொள்ளவில்லை.இந்தியாவை விட்டுச் செல்லும்போது  கூட இந்தியாவை தனித்தனி தேசங்களாகவே விட்டுச் சென்றார்கள்.இந்தியாவின் எந்த தேசத்துக்கும் தனி நாடாகப் போகும் உரிமை உண்டு என்ற நிபந்தனையை வைத்தே அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.இந்தியாவின் தனி நாடுகள் ஒருபோதும் ஒற்றைத்தேசியமாக ஒத்துக் கொள்ளாது என்றும் ஆகவே இந்தியா போரிட்டு அழியும் என்றும் நினைத்தார்கள்.ஆனால் பிரிட்டிஷாரை அதிர்ச்சி கொள்ள வைத்தபடி ஓரிரு மாதங்களில் இந்தியா ஒரே தேசமாக ஆகியது.பெரிய படை எடுப்புகளோ போர்களோ தேவையாக இருக்கவில்லை.இந்தியாவெங்கும் பல்வேறு சமஷ்தானங்களில் இருந்த மக்கள் அந்தந்த அரசர்களுக்கு எதிராகத் திரண்டு

போராடி இந்தியாவை ஒரே தேசமாக ஆக்கினார்கள்.
ஆனால் இந்தியா ஒரே தேசமாக ஆனபின் இந்தியா என்ற தேசியத்தை நிகழ்த்தியது தாங்களே என வெள்ளையர்களின்  வரலாற்றாசிரியர்கள்  சொல்ல ஆரம்பித்தார்கள்.இந்தியாவைப் பட்டேல் எப்படி ஒற்றுமைப்படுத்தினார்?ராணுவ வல்லமை மூலம் அல்ல.ஒப்புநோக்க அந்தப் பணிக்கு மிகக் குறைவாகவே படைபலம் பயன்படுத்தப்பட்டிருந்தது.அன்று இந்திய சமஷ்தானங்கள் இந்திய மைய அரசுக்கு எதிராகப் போரைத் தொடுத்திருக்க முடியுமா?முடியும்,அந்த அரசுக்குள் இருந்த மக்கள் அந்த அரசுகளை ஆதரித்திருந்தால்.தேசப் பிரிவினையின் விளைவான மதப்பிரிவினையால் அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம் பலவீனமாக இருந்தது.மக்களாதரவுடன் சமஷ்தானங்கள் போரிட்டிருந்தால் இந்திய அரசு தாக்குப் பிடித்திருக்காது.பட்டேலுக்கு உதவிய பெரும் சக்தி அந்தந்த சமஷ்தானங்களில் இருந்த மக்கள்தான்.
                          --ஜெயமோகன் எழுதிய 'இன்றைய காந்தி 'என்ற நூலிலிருந்து.

கெட்டது

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

இட்டுக் கெட்டது காது.
இடாமல் கெட்டது கண்.
உண்டு கெட்டது வயிறு.
உண்ணாது கெட்டது உறவு.
கேட்டுக் கெட்டது குடும்பம்.
கேளாமல் கெட்டது கடன்.
பார்த்துக் கெட்டது பிள்ளை.
பாராமல் கெட்டது பயிர்.
             --வாரியார் சுவாமிகள்.

அணுகுண்டு

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்:
**1.6 K.M.அகலத்திற்கு ஒளிக்கதிர் தோன்றும்.
**கடுமையான வெப்ப அலை பரவத் துவங்கும்.
**சில நிமிடங்களில் கடுமையான வெடிப்பு நிகழும்.
**மின் காந்தத் துடிப்பு அலைகளினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும்.
**வெடிப்பினால் ஏற்படும் வெப்பம் ஒரு கி.மீ.சுற்றளவிற்கு  சுமார் பத்து மில்லியன் டிகிரி சென்டிகிரேட் இருக்கும்.
**இந்த அதிக வெப்பத்தினால் மனிதன்,மரம்,செடி,கொடிகள்,உயிரினங்கள் அனைத்தும் ஒரு நொடியில் ஆவியாகிப் போகும்.
**2.5 கி.மி.க்கு அப்பால் உள்ள மரம்,பிளாஸ்டிக் மற்றும் துணி வகைகள் தானாகப் பற்றி எரியும்.
**சுமார் எட்டு கி.மி.க்கு அப்பால் உள்ள மனிதர்களின் ஆடைகள் எரியத் துவங்கும்.
**11 கி.மி..க்கு அப்பால் உள்ள மனிதர்களுக்கு  சாவு ஏற்படும் அளவுக்கு தீப்புண்கள் ஏற்படும்.
**மரச்சாமான்கள்,பெட்ரோல் பங்குகள் தீப்பற்றி எரியும்.
**2.5 மில்லியன் மக்கள் சில வாரங்களில் அழிவர்.
**அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காற்றில் கலந்திருக்கும் கதிரியக்கத்தால் மிகப் பல கொடுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

எது இனிது?

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்குக் கடன் நெருக்கடி.பலரிடம் சென்று கடன்  கேட்டான் .ஒவ்வொருவர் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள்.நொந்து போன அவன் பாடிய பாடல்:
வாதவர் கோன் பின்னைஎன்றான்.
வத்தவர் கோன் நாளை என்றான்.
யாதவர் கோன் யாதொன்றும்
இல்லை என்றான்.:ஆதலால்
வாதவர் கோன் பின்னையினும்
வத்தவர் கோன் நாளையினும்
யாதவர் கோன் இல்லை இனிது.

செப்பு மொழி

0

Posted on : Saturday, November 19, 2011 | By : ஜெயராஜன் | In :

காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஆடை கட்டத் துவங்கியபோது.
***********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
**********
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
**********
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
**********
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான்  நிம்மதி.
**********
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும்  தைரியம் வர வேண்டும்.
**********
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,
அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.
**********
,                                                  --கண்ணதாசன்


ஆசையை முறைப்படுத்த

0

Posted on : Saturday, November 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆசையை ஒழிக்க முடியாது.ஒழிக்கவும் வேண்டியதில்லை.ஆசையை ஒழுங்கு படுத்தினால் வாழ்வு வளம் பெரும்.
*உங்களின் எல்லா ஆசைகளையும் வரிசையாக ஒரு தாளில் தனிமையில் உட்கார்ந்து தொகுத்து எழுதிக் கொள்ளுங்கள்.
*ஒவ்வொரு ஆசையையும் முன் வைத்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளை ஆராய்ந்து எழுதுங்கள்.
அ)இது இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாதா?இது இன்றியமையாததா?
ஆ)இதை அடைய என்னிடம் உடல் நலம்,மன வளம்,பொருள் வளம் இருக்கிறதா?
இ)இதனால் எனக்கு ஏதேனும் தொல்லைகள் பின் விளைவாக உண்டாகுமா?
ஈ )இதைப் பெற்றால் ஏற்படப்போகும் நன்மை என்ன?இதில் எவ்வளவு தேவை.?
*'அவசியம் தான்,வசதியும் போதும்,பின் விளைவும் நன்மை' என்றால் ஆசையை ஏற்றுக் கொள்ளுங்கள்.நேர்மையான வழியில் அதை அடையத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
*அவசியம் இல்லை என்று கருதினால் இன்ன இன்ன காரணத்தினால் இது தேவையில்லை என்று முடிவு காட்டுங்கள்.
       இவ்வாறு முடிவு செய்தால் முறையற்ற ஆசை எழாது.நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் வளர்ச்சி பெரும்.அடுத்தடுத்து வாழ்வில் பல வெற்றிகள் கிட்டும்.மன அமைதியும் பெறலாம்.

கவலை ஏன்?

0

Posted on : Friday, November 18, 2011 | By : ஜெயராஜன் | In :

சேர்த்து வைக்கப்பட்டவை அழிகின்றன.
உயர்வுகள் தாழ்வை அடைகின்றன.
இணைப்புகள் பிளவு படுகின்றன.
வாழ்வு மரணத்தில் முடிகிறது.
பழுத்த பழம் தரையில் வீழ்ந்தே தீரும்.
பிறந்த மனிதன் இறந்தே தீருவான்.
போன இரவு திரும்புவதில்லை.
சமுத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு போகும் யமுனா நதி
அந்தத் தண்ணீரைக் கொண்டு மீண்டும் தரை நோக்கிப் பாய்வதில்லை.
சூரியன் உதயமானவுடன்,உழைத்து சம்பாதிக்கும்
ஆர்வத்தை மனிதன் பெறுகிறான்.
சூரியன் அஸ்தமனமாகும்போது,ஓய்வுக்கும் களிப்புக்கும்
நேரம் வந்து விட்டதாக மனிதன் மகிழ்கிறான்.
மாறிமாறி வரும் சூரிய உதயத்திலும்,அஸ்தமனத்திலும் தனது ஆயுள்
குறைந்து கொண்டு போவதை எந்த மனிதனும்
நினைத்துப் பார்ப்பதில்லை.
நீ  நின்றாலும்,நகர்ந்தாலும் உன்னுடைய நாட்கள்
குறைந்து கொண்டே போகின்றன.
உன்னை நினைத்து அல்லவா நீ கவலையுற வேண்டும்?
மாறாக மற்ற விஷயங்களுக்குக் கவலைப் படுவதேன்?
                              --வால்மீகி ராமாயணம்-ஆரண்ய காண்டம்.

ஏமாற்றியது யார்?

0

Posted on : Friday, November 18, 2011 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானி பரீத் தன சீடர்களுடன் ஒரு நீண்ட பயணம் செல்ல நடந்து சென்றார்.அவர்கள் நகர எல்லையைத் தாண்டுமுன்  அந்நகருக்கு பதவி ஏற்பதற்காக புதிய கவர்னர் எதிரில் வந்து கொண்டிருந்தார். கவர்னர் ,தன எதிரே பெரிய கூட்டத்தைப் பார்த்ததும்,தன்னை வரவேற்க வந்த குழு என்று நினைத்துக் கொண்டு,''அடடா,இந்த வெயிலில் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு என்னை வரவேற்க வந்தீர்கள்?இதற்கு அவசியம் இல்லையே!'' என்றார்.பரீதின் சீடர் ஒருவர்,''நாங்கள் தங்களை வரவேற்க வரவில்லை.நாங்கள் நெடிய பயணம் சென்று கொண்டிருக்கிறோம்.''என்றார். கவர்னரின் முகம் வாடி விட்டது எனினும் சமாளித்துக் கொண்டு சென்றார்.பரீத் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.கவர்னர் சென்ற சிறிது நேரம் கழித்து.தன சீடரிடம்,''நாங்கள் உங்களை வரவேற்க வரவில்லை என்று அப்பட்டமாகச் சொல்லி இருக்க வேண்டாமே!அவர் எவ்வளவு சங்கடத்தில் மாட்டிக் கொண்டார் பார்த்தாயா?''என்று கேட்டார்.சீடர் சொன்னார்,''நான் அவ்விதம் சொல்லவில்லை என்றால் நாம் அவரை ஏமாற்றியவர் ஆகா மாட்டோமா?''பரீத் சொன்னார்,''நம் மீது தவறு ஏதுமில்லை கவர்னர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.நாம் என்ன செய்ய முடியும்?''

நல்லது

0

Posted on : Thursday, November 17, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒளி மங்காமலும் அதே சமயம் கொழுந்து விட்டு எரியாமலும் இருப்பது நல்ல விளக்கு.
நீர்,ஓட வேண்டிய அளவு,ஓட வேண்டிய நேரத்தில் ஓடுவதுதான் நல்ல ஆறு.
மழை காலத்தில் ஒழுகாமலும்,வெயில் காலத்தில் வியர்க்காமலும்  நிதானமான் வெப்பநிலையுடன் இருப்பது நல்ல வீடு.
வீணாக்குவதற்கும்,தீய காரியம் செய்வதற்கு தூண்டும் வண்ணம் மித மிஞ்சி இல்லாமல் ,தேவையான அளவு பிறரை எதிர்பாராது சேர்வது நல்ல செல்வம்.
பிறர் கண்ணை உறுத்தும் அளவு கவர்ச்சியும் மினுமினுப்பும் இன்றி,கணவரையும்,குழந்தைகளையும்  அனுசரிக்கும் அளவு அழகு,நல்ல அழகு.

இந்தியரின் குணம்

0

Posted on : Thursday, November 17, 2011 | By : ஜெயராஜன் | In :

இந்தியர்கள் அடிமைத்தனத்தை சகித்துக் கொண்டார்கள்.ஆனால் யாரையும் அடிமையாக்கியதில்லை.மற்றவரை அடிமைப்படுத்த விரும்பினால் ஒழுங்குக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது.இந்தியர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபாடு காட்டியதில்லை.ஐயாயிரம் ஆண்டுகள் நிறைந்த வரலாற்றில் ஒரு மிகப் பெரிய இந்த சமுதாயம் ஒரே ஒரு ஜெங்கிஷ்கானைக் கூடத் தோற்றுவித்ததில்லை.அதை நம்மால் செய்ய முடியாது.ஆனால் நம்மால் ஒரு புத்தரை,ஒரு மகாவீரரை,ஒரு பதஞ்சலியை உருவாக முடிந்தது.அவர்கள் வித்தியாசமானவர்கள்.அவர்கள் ஒழுங்குக்  கட்டுப்பாட்டை உருவாக்க மாட்டார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா அடிமைப் பட்டுக் கிடந்தது.ஆனால் இந்தியா இன்னொரு நாட்டை வென்றதற்கு ஆதாரம் இல்லை.இந்தியாவின் ஒரு மாவட்ட அளவில் உள்ள இங்கிலாந்து கூட வென்றிருக்கிறது.இந்தியர்கள் போர் புரிவதில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள்.ஆனால் உண்மையில் இந்தியா எவராலும் எப்போதும் வீழ்த்தப்பட்டதில்லை.இந்தியர்கள் மற்றவர்களை வரவேற்றார்கள்.இந்த நாடு அமைதியானது.தேவையான உணவு இருந்தது.போதிய இடமும் இருந்தது.அமைதியை விரும்பிய மக்கள் ஆதிக்கத்தை விரும்பாமல் அடிமையாகக் கிடந்தார்கள்.

கடவுள் எங்கே?

0

Posted on : Wednesday, November 16, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.அவரும் ஒரு பையனை  அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.ஒரு பையன் அனுப்பப்பட்டான்.துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார்.பின்னர் கேட்டார்,
''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே?சொல்,கடவுள் எங்கே இருக்கிறார்.?''அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.அவன் சொன்னான்,''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.இப்ப கடவுளைக் காணோமாம்.அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான்.ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள்.இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.''

பூவா,தலையா?

0

Posted on : Wednesday, November 16, 2011 | By : ஜெயராஜன் | In :

ஏதாவது முக்கியமான பிரச்சினைக்கு முடிவு காண இயலாத சூழ்நிலையில் ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு பூவா தலையா என்று பார்த்து முடிவெடுக்கும் பழக்கம் அனேகரிடம் உண்டு அல்லவா?இந்தப் பழக்கம் எப்படி வந்தது?இதற்கு காரணகர்த்தா யார்?உளவியலின் தந்தை சிக்மன்ட் பிராய்ட் தான், முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த தன நண்பர்களுக்கு
இந்த வழியை சொல்லிக் கொடுத்தவர்.இதை மூடப் பழக்கம் என்று நிறையப் பேர் நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு யோசனையை எப்படி ஒரு பெரிய அறிஞரான பிராய்ட் சொன்னார்.ஒரு நாணயம் ஒரு மனிதனின் பிரச்சினைக்கு முடிவு காண்பதா?இந்தக் கேள்விக்கு  அவரே விடை சொன்னார்.  ''ஒரு மனிதன் முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒரு நாணயத்தை சுண்டிப் பார்க்க வேண்டும்.அவன் பூ என்று நினைத்து பூவே விழுந்து விட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா ,வருத்தம் ஏற்படுகிறதா என்று அவனே கவனித்துப் பார்க்க வேண்டும்.மகிழ்ச்சி ஏற்பட்டால் அந்தக் காரியத்தை செய்யலாம்.வருத்தம் ஏற்பட்டால் அதை நிறுத்தி விடலாம்.தலை விழுந்தாலும் இதே லாஜிக் தான்.''இப்போது சொல்லுங்கள்,இது மூடப்பழக்கமா?சரியான முடிவை எடுக்க ஒரு சரியான வழிதானே!

நம்மால்தான்..

0

Posted on : Tuesday, November 15, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவன் தன மனைவி,குழந்தையுடன் தன மாமனார் ஊருக்கு காரில் செல்லும்போது பாதை தவறி நேரமாகிவிட்டது.சரியான பாதை கண்டு பிடித்து செல்கையில் வழியில் இஞ்சின் நின்று விட்டது.உடனே கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் குறை கூறி ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்தார்கள்.குழந்தை இடைமறித்து,''நேரமாகுதே!சண்டை போடுவதற்குப் பதிலாக ஒருவர் தள்ள ஒருவர் ஸ்டார்ட் பண்ணினால் வண்டி ஓடுமே ,''என்று சொல்ல,மனைவி காரைத் தள்ள கணவன் ஸ்டார்ட் செய்தான்.குழந்தையும் காரினுள் உட்கார்ந்தவாறே தன கையினால் முன் இருக்கையை தள்ளுவதுபோல முயற்சி செய்தது.இஞ்சின்  ஓட ஆரம்பித்தது.குழந்தை கைகொட்டிச் சிரித்துக் கொண்டே,''நான் தள்ளியதால்தானே கார் ஓடுகிறது?''என்று கேட்டது.இந்தக் குழந்தை போலத்தான் நாம் ஏதாவது செய்துவிட்டு நம்மால்தான் அந்தக் காரியம் முடிந்தது என்று நினைக்கிறோம்.கூறிக் கொண்டு அலைகிறோம்.

உங்களுக்கே நல்லாயிருக்கா?

0

Posted on : Tuesday, November 15, 2011 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டியில் ஏறிய விருந்தாளி வழியனுப்ப வந்தவரிடம் குறை பட்டுக் கொண்டார்,''நான் ரயிலுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போனேன்.அப்போதே சொல்லியிருக்கலாம்.திரும்பி வந்து என் துணிகளை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்.அப்போது சொல்லியிருக்கலாம்.அப்புறம் குளித்துவிட்டு புறப்படுவதற்கு ட்ரெஸ் பண்ணினேன்.அப்போதாவது சொல்லியிருக்கலாம் .அப்போதும் கம்முன்னு இருந்தீங்க.அப்புறம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும்,'போய்வருகிறேன்,''என்று சொல்லி விடை பெற்றேன் .அப்போது கூட சொல்லியிருக்கலாம்.ஆனால் நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை.இப்போது ரயிலில் ஏறி ,வண்டி புறப்படக் கொடி அசைத்தவுடன் ,''இன்னும் இரண்டு நாள் நீங்கள் இருந்துட்டுப் போகலாமே''என்று சொல்கிறீர்களே,இது உங்களுக்கே நல்லாயிருக்கா?''
**********
வக்கீலின் வாதத் திறமையால் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றமற்றவர் என்று தீர்ப்புக் கூறினார்,நீதிபதி.வக்கீலுக்கு மகிழ்ச்சி.குற்றம் சாட்டப்பட்டவர் சற்று தயக்கத்துடன் கூண்டிலேயே நின்று கொண்டிருந்தார்.நீதிபதி ''ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?''என்று கேட்டார்.வக்கீல் சொன்னார்,''அவர் குற்றமற்றவர் என்று நீதிபதியிடம் விளக்கிப் புரிய வைத்த் விட்டேன்.அவர் குற்றமற்றவர் என்பதை இனிமேல்தான் அவரிடம் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.
**********

அறிவீரா?

0

Posted on : Monday, November 14, 2011 | By : ஜெயராஜன் | In :

பகவான் ராமகிருஷ்ண பரம ஹம்சரின் இயற்பெயர் கடாதார் சட்டோபாத்யாயா.விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்.
**********
யானை தன துதிக்கையினால் ஒரு டன் எடையைத் தூக்க முடியும்.இதன் பலத்திற்குக் காரணம் துதிக்கையில் நாற்பதாயிரம் தசைகள் உள்ளன.
**********
சாம்பிராணி தேவதாரு மரத்தின் பாலிலிருந்து செய்யப்படுகிறது.
**********
மராட்டிய வீரர் சிவாஜியை ஆங்கிலேயர்கள் மலை எலி என்று வர்ணித்தனர்.
**********
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
**********
சிலருக்கு பேருந்தில் செல்லும்போது வாந்தி வரும்.ஏன்?நம் காதுகளுக்குள் லேப்ரிந்த் என்ற பகுதி இருக்கிறது.பேருந்து,விமானம் இவற்றில் செல்லும்போது நம்மைச் சுற்றிக் காற்றழுத்தம் மாறுகிறது.அப்படி மாறும்போது லேப்ரிந்தால் அதைத் தாங்க முடிவதில்லை.அது வாந்தியை வரவழைக்கிறது.
**********
தூங்குபவர்கள் தும்ம முடியாது.
**********
க்ரையோஜெனிக்ஸ் என்றால் என்ன?மிகக் குறைந்த வெப்ப நிலையில் பொருள்கள் என்ன மாறுதல் அடைகின்றன:அந்த மிகக் குறைந்த வெப்ப நிலையை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றிய விஞ்ஞானம்.இந்த முறைப்படி ஆவிகளை மிகக் குறைந்த வெப்ப நிலையில் திரவமாக்கி அதை ராக்கெட்டுகளில் உபயோகிக்கிறார்கள்.
**********
உடலில்  ஏற்படும் வலியை டால்ஸ் (DOLS)என்ற UNIT ஆல் குறிப்பிடுகிறார்கள்.பிரசவத்தின்போது ஒரு பெண் 9.5 டால்ஸ் வலியை அனுபவிக்கிறார்.ஒரு மனிதன் அதிக பட்சம் 9.5டால்ஸ் அளவு வலியைத்தான் தாங்க முடியும்.
**********

சமயோசிதம்

0

Posted on : Monday, November 14, 2011 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.வெளியே கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்த ஒருவரின் விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது.அவர் பதறித் துடித்து படாதபாடு பட்டார்.இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் எதிர் சீட்டில் அமர்ந்து  பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.அவர் எந்த வித சலனமுமின்றி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அடுத்த ரயில் நிலையம் வந்தது.அவரைப் பார்க்க நிறைய அதிகாரிகள் வந்தனர்.அப்போது அவர் ஒரு அதிகாரியிடம் சொன்னார்,''இந்த இடத்திலிருந்து இருபது தந்திக் கம்பங்களுக்குப் பின்னால் ஒரு இடத்தில் இவரது விலை உயர்ந்த கைக் கடிகாரம் கீழே விழுந்து விட்டது.அதைத் தேடிக் கண்டுபிடித்து இவரிடம் சேர்ப்பித்து விடுங்கள்.''அந்தப் பெரியவர் ராஜாஜி. ஒரு பதட்டமான சூழ்நிலையில் சமயோசிதமாக அவர் செய்த காரியம் அங்கு  இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சிரிக்க முடியுமா?

0

Posted on : Sunday, November 13, 2011 | By : ஜெயராஜன் | In :

பழைய கார் ஒன்றினை விலைக்கு வாங்கிய ஒருவன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னான்,''இந்தக் காரைப் பார்த்தால் பழைய கார் மாதிரியே இல்லை அல்லவா?''நண்பன் சொன்னான்,''ஆமாம்,நீயே செய்தது போல இருக்கிறது.''
**********
கணவனுக்கு ஒரே ஆச்சரியம்!அவன் மனைவி வருகிற பிச்சைக்காரனுக்கு எல்லாம் சுடச்சுட தான் சமைத்த சாப்பாடைப் போட்டுக் கொண்டிருந்தாள்.''ஒரு வேலையும் செய்யாத அவர்களுக்கு ஏன் இப்படி அக்கறையாய் சோறு போடுகிறாய்?''மனைவி சொன்னாள்,''சமைத்த சாப்பாட்டில் குறையே சொல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு போடுவது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது?''
**********
பிச்சைக்காரன்,''அம்மா,வீட்டில் பாயாசம் ஏதாவது இருந்தால் போடுங்களேன் அம்மா,''என்று கத்தினான்.வீட்டிலிருந்த பெண்மணி கேட்டாள், ''அதென்னப்பா,எல்லோரும் சாப்பாடு கேட்பார்கள்,நீ என்னவோ,புதுசாய் பாயாசம் கேட்கிறாய்?''அவன் சொன்னான்,''இன்று எனக்கு பிறந்த நாள்,அம்மா.''
**********
காவல்காரன் வேலைக்கு ஒரு பெரிய வீட்டிற்கு தேர்வுக்கு ஒருவன் வந்தான். வீட்டுக்காரர் சொன்னார்,''நாங்கள் எதிர்பார்ப்பது,நீங்கள் சுறுசுறுப்பாகவும் ,சிறிய சப்தம் கேட்டால் கூட உடனே அங்கு ஓட வேண்டும்:ஒரு கண் மூடியிருந்தாலும் இரு காதும் முழுதும் திறந்திருக்க வேண்டும்.எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.'' வந்தவன் அங்கிருந்து திரும்ப செல்ல எத்தனித்தான்.விபரம் கேட்க அவன் சொன்னான்,''நீங்கள் கேட்கும் தகுதி என் மனைவிக்குத்தான் இருக்கு.நான் போய் அவளை வரச் சொகிறேன்.''
**********
''போன வாரம் என் அண்ணனுக்கு கால் முறிவு ஆயிற்று.''என்றான் ஒருவன்.எப்படி என்று கேட்க அவன் சொன்னான்,''என் அண்ணன் சுவற்றுக்கு வண்ணம் பூசுபவர்.ஐந்தாம் மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் தான் அடித்த வர்ணம் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க பின்னால் நகன்று விட்டார்.''
**********
ஜெயில் வார்டன் ,''தவறுதலாக உன்னை ஒரு வாரம் கூடுதலாக ஜெயிலில் வைத்து விட்டோம்,''என்று வருத்தத்துடன் சொன்னார்,கைதி சொன்னான்,''அதனால் என்ன,சார்,அடுத்த தடவை வரும்போது சரி செய்து கொள்ளலாம்.''
***********
விபத்தில் காயம் பட்டவருக்கு நீதி மன்றத்தில் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க தீர்ப்பு வந்தது.பணத்தைப் பெற்றுக் கொண்ட வக்கீல் அடிபட்டவரிடம் இருபதாயிரம் மட்டும் கொடுத்தார்.அடிபட்டவர் திகைத்துப்போய் அவரைப் பார்க்க,''என்ன சந்தேகம் உங்களுக்கு?''என்று கேட்டார்.அடிபட்டவர் கேட்டார்,''விபத்தில் காயம் அடைந்தது நானா,நீங்களா?''
**********

உழைப்பு தவம்

0

Posted on : Saturday, November 12, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு விவசாயி தன நிலத்தில் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் அருகில் இருந்த குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டு கூழாங்கற்களை குளத்துக்குள் வீசிக் கொண்டு சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டிருந்ததைக்  கண்டார்.அவருக்கு எரிச்சல் உண்டாயிற்று.''நாம் கஷ்டப்படும்போது இவன் மட்டும் சோம்பேறித் தனமாய் பொழுதைப் போக்குகிறானே,''என்று எண்ணினார்.சில நாட்கள் கழித்து விவசாயி பக்கத்து நகரில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சிக்கு சென்றபோது ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் நூற்றுக் கணக்கானோர் ரசித்துச் செல்வதைக் கண்டார்.விவசாயியும் அந்த ஓவியத்தால் கவரப்பட்டு அந்த ஓவியரைக் காண விரும்பினார்.அந்த ஓவியர் வேறு யாருமல்ல. குளத்தங்கரையில் அன்று கல்லை வீசிக் கொண்டிருந்தவர்தான்.அந்த ஓவியம் குளத்தங்கரையின் கவிதை மயமான சூழ்நிலை தோற்றத்தை காட்டியது.அதை வரையத்தான் அந்த ஓவியன் மணிக்கணக்காகக் குளத்தங்கரையில் காத்திருந்திருக்கிறான்.விவசாயி பாராட்டினான், ''அய்யா,நீங்களும் ஒரு உழைப்புத்தவத்தில் தான் இருந்திருக்கிறீர்கள்என்று எனக்கு இப்போது புரிகிறது.நீங்கள் உருவாக்கிய படைப்பு ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கிறது.என் வாழ்த்துக்கள்.''

எப்படி வந்தது?

0

Posted on : Saturday, November 12, 2011 | By : ஜெயராஜன் | In :

PEN  என்ற ஆங்கிலச்சொல் PENNA என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது.இந்தச் சொல்லுக்கு இறகு என்று பொருள்.
***********
சோழ மன்னர்கள் முதன் முதலாக நிக்கோபார் தீவுக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் ஆடையின்றி இருப்பதைக் கண்டனர்.ஆகவே அவர்கள் வாழும் இடத்தை நக்காவரம் என்று அழைத்தனர்.அதுவே பின்னர் நிக்கோபார் என்று ஆயிற்று.
**********
பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.
**********
போர்ச்சுக்கலில் பூதத்தை COCO என்பர்.லத்தீனில் COCOக்கு மண்டை ஓடு என்று பொருள்.போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் பசிபிக் தீவுகளில் தென்னை மர வகைகளைக் கண்டனர்.அவற்றின் காய்கள் மனிதத் தலை அளவு இருப்பதையும்,அதில் கண்களும் இருப்பதைப் பார்த்ததும் அது பூதம் போல இருப்பதாகக் கருதி COCONUT என்று பெயரிட்டனர்.
**********
GROOM என்ற ஆங்கில வார்த்தைக்கு குதிரைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டும் சிப்பந்தி என்று பொருள்.பின்னால் ,சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களையும் GROOM என அழைத்தனர்.பழங்காலத்தில் ஐரோப்பிய கிராமங்களில் விருந்துகளின்போது புதிதாய்த் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை,கல்யாணப் பெண்  சாப்பிடும் மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து உபசரிக்க வேண்டும்.எனவே கணவனுக்கு BRIDE'S GROOM எனப் பெயர் வந்தது.நாளடைவில் அதுவே BRIDEGROOM என்று ஆகிவிட்டது.
**********
முற்காலத்தில் ஐரோப்பாவில் போரிலோ அல்லது தனிப்பட்ட முறையில் மன்னர்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு நிலம்,வீடு ஆகியவை கொடுக்கப்பட்டன.இப்படி பெறுபவர்களை HUSBAND என அழைத்தனர்.HUS என்றால் வீடு.BANDA என்றால் சொந்தக்காரர்.சமூகத்தில் அவர்களுக்கு தனி மதிப்பு இருந்ததால் அவர்களை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ளப் போட்டி இருந்தது.இப்படி ஆரம்பித்து பின்னர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவன் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் HUSBAND என்று அழைக்கப்பட்டான்.
***********
.

பொன்மொழிகள் --23

0

Posted on : Friday, November 11, 2011 | By : ஜெயராஜன் | In :

11.11.11.இது எனது ஆயிரமாவது இடுகை.இதுவரை எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
*********************************************************************
கடைசி  வார்த்தை  தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
**********
வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
***********
இளமை ஒரு தவறு.
வாலிபம்  ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
**********
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
**********

நச்சு எண்ணங்கள்

0

Posted on : Friday, November 11, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.அவை எங்கும் பரவிக் கிடக்கும்.மிகச்சாவகாசமாகத்தான் வேலை செய்யும்..அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.அவை:
குமுறல்: நாம் சிறுமைப் படுத்தப் பட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும் போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது அடிமனதில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளா வட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.
நழுவல்:நழுவல் மனோபாவம்,(escapism)  மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உள் மனதில் ஏற்படும் விருப்பத்தால்,குறிக்கோளை அடைய வேண்டும் என்ற நிலையில் முக்கியமான பணி திசை திருப்பச் செய்கிறது.அதன் விளைவாகத் தப்பிப்பதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது..

முதுகிற்குப் பின்னால்

0

Posted on : Friday, November 11, 2011 | By : ஜெயராஜன் | In :

முதுகிற்குப்பின் யார்தான் பேசவில்லை?எல்லோரும் நம்மைப் பற்றி சிறிதளவேனும் மனக் குறைவோடு குறிப்பிடவே செய்கிறார்கள்.நம் அன்பிற்குரியவர்கள்,மரியாதைக்குரியவர்கள்,நம்மை நம்பி வாழ்பவர்கள்,நம் தயவை நாடுபவர்கள் கூட இதற்கு விதி  விலக்காக இருக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி இரண்டாவது கருத்து இருக்கத்தான் செய்கிறது.சிலர் அதை நம் காதுக்கு எட்டும்படி பேசுகிறார்கள்:சிலர் அதை சாமர்த்தியமாகக் கடைசி வரை மறைத்தே வருகிறார்கள்.
இந்த உண்மையை நெஞ்சில் நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக ஏதும் பேசியதாகக் கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியோ,வருத்தமோ,கோபமோ வராது.நம்மைப்  பற்றி ஒருவர் மனக் குறையுடன் பேசியதாகக் கேள்விப்பட்டால்,அவருடன் சண்டை போடுவதற்குப் பதில் அவர் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் ஏற்கனவே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல்  ஏன் அப்படி நேர்ந்தது என்று மிக இயல்பாக விளக்கிக் கூறினால் அவர் சரணாகதி அடைய மாட்டாரா?
பல மனிதர்களுக்கு தீர்மானமான தெளிவான கருத்து இருப்பதில்லை. நேரத்திற்கு ஒன்றைப் பேசுவது,தோன்றியதைஎல்லாம் சொல்வது என்று வைத்திருக்கிறார்கள்.எனவே இவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வருந்தவோ,கவலைப்படுவதோ வேண்டியதில்லை.
முதுகிற்குப் பின்னால் பேசுவது என்பது மனிதனின் தலையாய பலவீனம்.இதற்குக் காரணம் இருக்கிறது.பாராட்டைத் தவிர முகத்திற்கு நேரே சொல்லப்படும் எந்தக் கருத்தையும் நாம் விரும்புவதில்லை.அப்புறம் முதுகிற்குப் பின்னால் பேசாமல் எப்படி இருப்பார்கள்?மனிதர்களால் மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.
இதில் இடைப்பட்டவர்கள் செய்யும் கெடுதலும் உண்டு.வேண்டுமென்றே வார்த்தைகளையும்,தொனியையும்,தோரணையையும் மாற்றி பெரிது படுத்தி விடுவார்கள்.
நம்மைப் பற்றிச் சொல்லப்படும் விசயங்களில் உள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ளவும் ,உண்மை யற்றவைகளைப் புறக்கணிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே இதற்கெல்லாம் மன அமைதியை கெடுத்துக் கொள்ளக் கூடாது.
                                                  --லேனா தமிழ்வாணன்.