உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கவலை ஏன்?

0

Posted on : Friday, November 18, 2011 | By : ஜெயராஜன் | In :

சேர்த்து வைக்கப்பட்டவை அழிகின்றன.
உயர்வுகள் தாழ்வை அடைகின்றன.
இணைப்புகள் பிளவு படுகின்றன.
வாழ்வு மரணத்தில் முடிகிறது.
பழுத்த பழம் தரையில் வீழ்ந்தே தீரும்.
பிறந்த மனிதன் இறந்தே தீருவான்.
போன இரவு திரும்புவதில்லை.
சமுத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு போகும் யமுனா நதி
அந்தத் தண்ணீரைக் கொண்டு மீண்டும் தரை நோக்கிப் பாய்வதில்லை.
சூரியன் உதயமானவுடன்,உழைத்து சம்பாதிக்கும்
ஆர்வத்தை மனிதன் பெறுகிறான்.
சூரியன் அஸ்தமனமாகும்போது,ஓய்வுக்கும் களிப்புக்கும்
நேரம் வந்து விட்டதாக மனிதன் மகிழ்கிறான்.
மாறிமாறி வரும் சூரிய உதயத்திலும்,அஸ்தமனத்திலும் தனது ஆயுள்
குறைந்து கொண்டு போவதை எந்த மனிதனும்
நினைத்துப் பார்ப்பதில்லை.
நீ  நின்றாலும்,நகர்ந்தாலும் உன்னுடைய நாட்கள்
குறைந்து கொண்டே போகின்றன.
உன்னை நினைத்து அல்லவா நீ கவலையுற வேண்டும்?
மாறாக மற்ற விஷயங்களுக்குக் கவலைப் படுவதேன்?
                              --வால்மீகி ராமாயணம்-ஆரண்ய காண்டம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment