உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நம்மால்தான்..

0

Posted on : Tuesday, November 15, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவன் தன மனைவி,குழந்தையுடன் தன மாமனார் ஊருக்கு காரில் செல்லும்போது பாதை தவறி நேரமாகிவிட்டது.சரியான பாதை கண்டு பிடித்து செல்கையில் வழியில் இஞ்சின் நின்று விட்டது.உடனே கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் குறை கூறி ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்தார்கள்.குழந்தை இடைமறித்து,''நேரமாகுதே!சண்டை போடுவதற்குப் பதிலாக ஒருவர் தள்ள ஒருவர் ஸ்டார்ட் பண்ணினால் வண்டி ஓடுமே ,''என்று சொல்ல,மனைவி காரைத் தள்ள கணவன் ஸ்டார்ட் செய்தான்.குழந்தையும் காரினுள் உட்கார்ந்தவாறே தன கையினால் முன் இருக்கையை தள்ளுவதுபோல முயற்சி செய்தது.இஞ்சின்  ஓட ஆரம்பித்தது.குழந்தை கைகொட்டிச் சிரித்துக் கொண்டே,''நான் தள்ளியதால்தானே கார் ஓடுகிறது?''என்று கேட்டது.இந்தக் குழந்தை போலத்தான் நாம் ஏதாவது செய்துவிட்டு நம்மால்தான் அந்தக் காரியம் முடிந்தது என்று நினைக்கிறோம்.கூறிக் கொண்டு அலைகிறோம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment