உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிக்க முடியுமா?

0

Posted on : Sunday, November 13, 2011 | By : ஜெயராஜன் | In :

பழைய கார் ஒன்றினை விலைக்கு வாங்கிய ஒருவன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னான்,''இந்தக் காரைப் பார்த்தால் பழைய கார் மாதிரியே இல்லை அல்லவா?''நண்பன் சொன்னான்,''ஆமாம்,நீயே செய்தது போல இருக்கிறது.''
**********
கணவனுக்கு ஒரே ஆச்சரியம்!அவன் மனைவி வருகிற பிச்சைக்காரனுக்கு எல்லாம் சுடச்சுட தான் சமைத்த சாப்பாடைப் போட்டுக் கொண்டிருந்தாள்.''ஒரு வேலையும் செய்யாத அவர்களுக்கு ஏன் இப்படி அக்கறையாய் சோறு போடுகிறாய்?''மனைவி சொன்னாள்,''சமைத்த சாப்பாட்டில் குறையே சொல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு போடுவது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது?''
**********
பிச்சைக்காரன்,''அம்மா,வீட்டில் பாயாசம் ஏதாவது இருந்தால் போடுங்களேன் அம்மா,''என்று கத்தினான்.வீட்டிலிருந்த பெண்மணி கேட்டாள், ''அதென்னப்பா,எல்லோரும் சாப்பாடு கேட்பார்கள்,நீ என்னவோ,புதுசாய் பாயாசம் கேட்கிறாய்?''அவன் சொன்னான்,''இன்று எனக்கு பிறந்த நாள்,அம்மா.''
**********
காவல்காரன் வேலைக்கு ஒரு பெரிய வீட்டிற்கு தேர்வுக்கு ஒருவன் வந்தான். வீட்டுக்காரர் சொன்னார்,''நாங்கள் எதிர்பார்ப்பது,நீங்கள் சுறுசுறுப்பாகவும் ,சிறிய சப்தம் கேட்டால் கூட உடனே அங்கு ஓட வேண்டும்:ஒரு கண் மூடியிருந்தாலும் இரு காதும் முழுதும் திறந்திருக்க வேண்டும்.எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.'' வந்தவன் அங்கிருந்து திரும்ப செல்ல எத்தனித்தான்.விபரம் கேட்க அவன் சொன்னான்,''நீங்கள் கேட்கும் தகுதி என் மனைவிக்குத்தான் இருக்கு.நான் போய் அவளை வரச் சொகிறேன்.''
**********
''போன வாரம் என் அண்ணனுக்கு கால் முறிவு ஆயிற்று.''என்றான் ஒருவன்.எப்படி என்று கேட்க அவன் சொன்னான்,''என் அண்ணன் சுவற்றுக்கு வண்ணம் பூசுபவர்.ஐந்தாம் மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் தான் அடித்த வர்ணம் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க பின்னால் நகன்று விட்டார்.''
**********
ஜெயில் வார்டன் ,''தவறுதலாக உன்னை ஒரு வாரம் கூடுதலாக ஜெயிலில் வைத்து விட்டோம்,''என்று வருத்தத்துடன் சொன்னார்,கைதி சொன்னான்,''அதனால் என்ன,சார்,அடுத்த தடவை வரும்போது சரி செய்து கொள்ளலாம்.''
***********
விபத்தில் காயம் பட்டவருக்கு நீதி மன்றத்தில் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க தீர்ப்பு வந்தது.பணத்தைப் பெற்றுக் கொண்ட வக்கீல் அடிபட்டவரிடம் இருபதாயிரம் மட்டும் கொடுத்தார்.அடிபட்டவர் திகைத்துப்போய் அவரைப் பார்க்க,''என்ன சந்தேகம் உங்களுக்கு?''என்று கேட்டார்.அடிபட்டவர் கேட்டார்,''விபத்தில் காயம் அடைந்தது நானா,நீங்களா?''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment