உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆசையை முறைப்படுத்த

0

Posted on : Saturday, November 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆசையை ஒழிக்க முடியாது.ஒழிக்கவும் வேண்டியதில்லை.ஆசையை ஒழுங்கு படுத்தினால் வாழ்வு வளம் பெரும்.
*உங்களின் எல்லா ஆசைகளையும் வரிசையாக ஒரு தாளில் தனிமையில் உட்கார்ந்து தொகுத்து எழுதிக் கொள்ளுங்கள்.
*ஒவ்வொரு ஆசையையும் முன் வைத்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளை ஆராய்ந்து எழுதுங்கள்.
அ)இது இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாதா?இது இன்றியமையாததா?
ஆ)இதை அடைய என்னிடம் உடல் நலம்,மன வளம்,பொருள் வளம் இருக்கிறதா?
இ)இதனால் எனக்கு ஏதேனும் தொல்லைகள் பின் விளைவாக உண்டாகுமா?
ஈ )இதைப் பெற்றால் ஏற்படப்போகும் நன்மை என்ன?இதில் எவ்வளவு தேவை.?
*'அவசியம் தான்,வசதியும் போதும்,பின் விளைவும் நன்மை' என்றால் ஆசையை ஏற்றுக் கொள்ளுங்கள்.நேர்மையான வழியில் அதை அடையத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
*அவசியம் இல்லை என்று கருதினால் இன்ன இன்ன காரணத்தினால் இது தேவையில்லை என்று முடிவு காட்டுங்கள்.
       இவ்வாறு முடிவு செய்தால் முறையற்ற ஆசை எழாது.நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் வளர்ச்சி பெரும்.அடுத்தடுத்து வாழ்வில் பல வெற்றிகள் கிட்டும்.மன அமைதியும் பெறலாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment