உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏமாற்றியது யார்?

0

Posted on : Friday, November 18, 2011 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானி பரீத் தன சீடர்களுடன் ஒரு நீண்ட பயணம் செல்ல நடந்து சென்றார்.அவர்கள் நகர எல்லையைத் தாண்டுமுன்  அந்நகருக்கு பதவி ஏற்பதற்காக புதிய கவர்னர் எதிரில் வந்து கொண்டிருந்தார். கவர்னர் ,தன எதிரே பெரிய கூட்டத்தைப் பார்த்ததும்,தன்னை வரவேற்க வந்த குழு என்று நினைத்துக் கொண்டு,''அடடா,இந்த வெயிலில் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு என்னை வரவேற்க வந்தீர்கள்?இதற்கு அவசியம் இல்லையே!'' என்றார்.பரீதின் சீடர் ஒருவர்,''நாங்கள் தங்களை வரவேற்க வரவில்லை.நாங்கள் நெடிய பயணம் சென்று கொண்டிருக்கிறோம்.''என்றார். கவர்னரின் முகம் வாடி விட்டது எனினும் சமாளித்துக் கொண்டு சென்றார்.பரீத் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.கவர்னர் சென்ற சிறிது நேரம் கழித்து.தன சீடரிடம்,''நாங்கள் உங்களை வரவேற்க வரவில்லை என்று அப்பட்டமாகச் சொல்லி இருக்க வேண்டாமே!அவர் எவ்வளவு சங்கடத்தில் மாட்டிக் கொண்டார் பார்த்தாயா?''என்று கேட்டார்.சீடர் சொன்னார்,''நான் அவ்விதம் சொல்லவில்லை என்றால் நாம் அவரை ஏமாற்றியவர் ஆகா மாட்டோமா?''பரீத் சொன்னார்,''நம் மீது தவறு ஏதுமில்லை கவர்னர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.நாம் என்ன செய்ய முடியும்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment