உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கேள்வி-பதில் 2

2

Posted on : Friday, November 30, 2012 | By : ஜெயராஜன் | In :

கேள்வி:நான் மிக நல்லவன்.யாரையும் நான் கெடுக்க விரும்புவதில்லை. ஆனாலும் எனக்கேன் எல்லோரும் தொல்லை கொடுக்கிறார்கள்?
பதில்:வாழ்க்கையில் எவ்வளவோ போட்டிகள் வரும்.அதற்கு ஈடு கொடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:நான் எண்ணியபடி நடக்காவிடில் என் வாழ்க்கையே வீணாகி விடுமே?
பதில்:வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்,என்று அளவுகோல் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.அது ஒரு குறுகிய கண்ணோட்டம் ஆகும். வாழ்க்கையை அதன் வழியிலேயே நடத்துங்கள்.
********
கேள்வி:என் மீது யாருக்கும் இரக்கமும் இல்லை,அனுதாபமும் இல்லை.
பதில்:மற்றவர்கள் நமக்கு கடன் பட்டவர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது.அந்த எண்ணத்தை முதலில் களையுங்கள்.யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளக் கூடாது.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும்.
********
கேள்வி:என்னை ஒருவர் தாழ்த்திப் பேசினால் அதை நான் பொறுப்பதா? அல்லது சாவதா?
பதில்:பிறருடன் சம்பந்தப்படும் எந்த செயலும் விமரிசனத்திற்கு உட்பட்டதே.விமரிசனங்களை ஆராய்ந்து சரியாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும்,தவறாக இருந்தால் அதை மறக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:நான் பிறர் மீது அளவு கடந்த பாசம் வைப்பதால் கோபப்பட்டு விடுகிறேன்.
பதில்:உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாததால் வரும் ஆதங்கம்தான் இது.
********
கேள்வி:நான் எக்காரணத்தைக் கொண்டும் எனது கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
பதில்:மற்றவர்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணமும் வீண் பிடிவாதமும்தான் ஒவ்வொருவரும் இவ்வாறுஎண்ணக் காரணம்.
********

கடி

2

Posted on : Thursday, November 29, 2012 | By : ஜெயராஜன் | In :

''பட்டப்பகலில் நடுத்தெருவில் அநியாயம்!என்னால் பார்க்கப் பொறுக்கலை.''
'நீங்க அதற்கு என்ன செஞ்சீங்க?'
''கண்ணை மூடிக்கிட்டே அந்த இடத்தை அவசரமாய்க் கடந்து வந்து விட்டேன்.''
********
''கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி இருக்குங்க...''
'அப்படியா?எந்த சாமியைக் கும்பிடப் புறப்பட்டீங்க?'
''ஆஞ்சநேயர் சுவாமியைத்தான்.''
********
''என்ன மாப்பிள்ளே,நான் வாங்கிக் கொடுத்த தொலைக் காட்சிப் பெட்டியை விற்று விட்டீங்களாமே?''
'நீங்கதானே மாமா,என் பெண்ணை  கண் கலங்காமப் பார்த்துக்கோன்னு சொன்னீங்க!''
********
''நாலு நாளாய் தூக்கமே இல்லையே,டாக்டர்!''
'ஆபீசுக்கு லீவு போடாதேங்கன்னு சொன்னா கேட்டால்தானே!'
********
''ஏண்டா,பேயறைஞ்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்கே?''
'அடப்பாவி,என் மனைவி என்னை அடிச்சதை எப்படி கண்டு பிடிச்ச?'
********
டாக்டர்:உங்க உடம்பு எடை குறையணும் என்றால் தினமும் நாலு கிலோமீட்டர் தூரமாவது நடக்க வேண்டும்.
நோயாளி:'நடக்குற' காரியமா சார் அது?
********
''அந்த நோயாளி அபாயக் கட்டத்தைத் தாண்டி பேச ஆரம்பிச்சிட்டார்.''
'அப்புறம்?'
''டாக்டரோட பில்லில் இருந்த அபாய கட்டணத்தை தாண்ட முடியாமல் திரும்ப கோமா நிலைக்குப் போய்விட்டார்.''
********
பத்திரிகை ஆசிரியர்:உங்க கதையிலே நடை சரியில்லையே?
எழுத்தாளர்:அதான்,கதாநாயகனுக்கு ஒரு கால் நொண்டியாச்சே!
********
''என் மனைவிக்கு கோபம் வந்தால் எடுத்தெறிஞ்சு பேசி விடுவாள்.''
'பரவாயில்லையே,என் மனைவிக்குக் கோபம் வந்தால் என் மேலே எதையாவது எடுத்து எறிஞ்சு அப்புறம்தான் பேசுவாள்.'
********

கேள்வி-பதில்

1

Posted on : Thursday, November 29, 2012 | By : ஜெயராஜன் | In :

கேள்வி:''வாழ்க்கை என்பதே சோதனைகள் நிறைந்ததாயிருக்கிறது.என் வாழ்க்கையே சூனியமாகி  விட்டதாய் உணர்கிறேன்.அது ஏன்?
பதில்:பிரச்சினைகளை மிகைப் படுத்திப் பார்ப்பதும் தனது திறமைகளை உணர்ந்து செயல் படாததுமே இவ்வாறு நினைப்பதற்குக் காரணம்.
********
கேள்வி:செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த பிறகும் கூட மனதில் ஏதோ ஒரு குறை உறுத்திக் கொண்டேயிருக்கிறதே,அது ஏன்?
பதில்:குறைகளை மிகைப் படுத்தும் எதிர்மறைக் கண்ணோட்டம் உடையவர்களுக்கே இந்த எண்ணம் உருவாகும்.எதையும் நேர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகிப் பாருங்கள்.
********
கேள்வி:எல்லோரும் என்னைத் தனிமைப் படுத்தி விட்டார்களே?
பதில்:நம்ப வேண்டியவர்களை சந்தேகித்து விடுவதாலும், சந்தேகத்திற்குரியவர்களை நம்பி விடுவதாலும் ஏற்படும் விளைவே இது.
********
கேள்வி:எப்போதும் எனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது.அதற்கு என்ன செய்வது?
பதில்:மனதின் பயம்,மனதின் பதட்ட நிலை ஆகியவையே இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம்.நிதானத்தைக் கடைப் பிடித்துப் பாருங்கள்.
********
கேள்வி:நல்ல நிலையில் இருந்த நான் பிறர் சொல்லைக் கேட்டதால் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டேனே.
பதில்:தான் செய்த தவறுக்கு பிறர் மீது பழி சுமத்துதல்,மனதில் தெளிவின்மை ஆகியவையே காரணம்.தவறை ஏற்றுக் கொள்ளும் திறந்த மனப் பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:எனக்கு இளகிய மனம்.எதையும் என்னால் தாங்க முடிவதில்லை. கடந்த காலத்தை என்னால் மறக்க முடியவில்லை.
பதில்:சுமைகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.பிறர் மீது ஆற்றாமை கொள்ளாதீர்கள்.பிறர் குறைபாடுகளை எளிதில் மறக்கப் பழகுங்கள். நடைமுறைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளப் பழகுங்கள்.
********

அடக்கடவுளே!

4

Posted on : Sunday, November 25, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பையன் பள்ளிக்கு சற்று தாமதமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். அவனுக்கு ஆசிரியர் அடிப்பாரோ,திட்டுவாரோ,என்று அச்சம் ஏற்பட்டது. எனவே  வேகமாக நடந்து கொண்டே,''கடவுளே,இன்று நான் பள்ளிக்கு தாமதமில்லாமல் சரியான நேரத்திற்கு சென்றிட வேண்டும்.அதற்கு நீ துணை புரிய வேண்டும்.ஆசிரியரிடமிருந்து என்னைக் காக்க வேண்டும்,''என்று வேண்டிக் கொண்டான்.அவனது  கவனம் பிரார்த்தனையில் இருந்ததால் சாலையில் கிடந்த வாழைப்பழத் தோலை கவனிக்கவில்லை.அதில் காலை வைத்ததும் வேகமாக சறுக்கி விழுந்தான்.அது ஒரு இறக்கமான சாலை  என்பதால் சறுக்கியதில் பல அடி தூரம் சென்று விட்டான்,அப்போது அவன்,''அடக் கடவுளே!விரைவில் பள்ளி செல்ல உதவச்சொன்னால் இப்படியா தள்ளி விடுவது?''என்று புலம்பினான்.

எண்ணமே வாழ்வு.

3

Posted on : Sunday, November 25, 2012 | By : ஜெயராஜன் | In :

உன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பெருமைப் படத்தக்க மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளை உன் மனக் கண் முன்னால்  கொண்டு வந்து நிறுத்தி உனக்கே நீ ஊக்கப் படுத்திக்கொள்.
உன் வேலையை நீ மன அமைதியுடன் தான் செய்து தீர வேண்டும் என்று உனக்கே நீ கட்டளை பிறப்பித்துக் கொள்.
சாப்பிடும்போது கவலைப்படவோ,கோபப்படவோ,பொறாமைப்படவோ செய்யாதே.அவ்வுணர்வுகள் உண்ட உணவை ஒழுங்காக செரிக்க செய்யா.
உடல்,மூளையின் ஊழியன்.எண்ணம்தான் செயல்களின் தலைவன்.ஒரு விஷயத்தை நீ திரும்பத் திரும்ப எண்ணினால்,அது பலமடைந்து உன்னையும் அறியாமல் உனக்கு நலமளிக்கும் வகையிலோ,தீமை பயக்கும் முறையிலோ செயலாற்றுகிறது.
நல்ல எண்ணம் உடலை இளமை பொருந்தியதாக்குகிறது.ஒருவன் வளமான வாழ்வை விரும்பி வளமான எண்ணங்களை என்ன வேண்டும்.அவ்விதம் ஆகி விட்டதாக உணர வேண்டும்.
ஒரு செயலை நீ செய்யப் புறப்படும்போதே அது உன்னால் நிச்சயம் முடியும் என்ற எண்ணத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும்.சந்தேகம் கூடாது.நம்பிக்கையே பலன் அளிக்கும்.
                                                                   --அப்துல் ரஹீம்.

நச்சரிப்பு

3

Posted on : Saturday, November 24, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தீவிர பக்தன் இருந்தான் நாள் முழுவதும் ஏதாவது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பான்.அவனுடைய தம்பி இவனுக்கு நேர் மாறானவன்.பெரிய நாத்திகவாதி.சமீபத்தில் பக்தனின் மனைவி இறந்து விட்டாள் .அவனுடைய கூட்டாளி வியாபாரத்தில் அவனை ஏமாற்றி விட்டான்.அவனுடைய வீடு தீப்பிடித்து எரிந்து விட்டது. அவனுடைய குழந்தைகள் தறுதலையாய் திரிந்தார்கள். அதே சமயம் அவனுடைய தம்பி மிக மகிழ்ச்சியுடன் தனது  மனைவி,குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.பக்தன் ஒரு நாள் தாங்க முடியாமல் கடவுளிடம்,''நான் உன்னைக் குறை சொல்லவில்லை.என் வீடு எரிந்தபோதும் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு உன்னையே வணங்கினேன்.என் மனைவி இறந்தபோது அதற்கு நல்ல காரணம் இருக்கும் என்று நம்பினேன்.என் குழந்தைகள் எனக்கு எதிராக வந்தபோது கூட எல்லாம் உன் செயல் என்று தேற்றிக்கொண்டு  உன்னைத் தான் கும்பிட்டேன்.எந்நேரமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இத்தனை சோதனைகள்?உன்னைத் தூற்றித் திரியும் என் தம்பி சகல வசதிகளுடனும் நன்றாக வாழ்கிறானே,அது ஏன்?''என்று கேட்டான். கடவுள் வெறுப்புடன் சொன்னார்,''நாள் முழுவதும் உன் நச்சரிப்பு தாங்காமல்தான் !''
கடவுளை எந்நேரமும் நச்சரித்துக் கொண்டிருந்தால்  பாவம் அவர்தான் என்ன செய்வார்? .

கடைசிப் பேருந்து

3

Posted on : Saturday, November 24, 2012 | By : ஜெயராஜன் | In :

கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் பக்கத்திலிருந்த நகரத்திற்கு சென்றார்கள்.அங்கு ஒரு மதுக் கடையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.நீண்ட நேரம் சென்றபின் ஒருவன் சொன்னான்,''டேய்  மாப்பிள்ள,கடைசி பேருந்தைப் பிடித்தாவது ஊருக்குப் போக வேண்டுமே,''என்றான்.உடனே இருவரும் பேருந்து நிலையம் சென்றனர்.அப்போது கடைசிப் பேருந்து போய்விட்டிருந்தது.என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.உற்சாகமாக ஒருவன் கத்தினான்,''பக்கத்தில்தானே பேருந்து டெப்போ இருக்கிறது!ஏதாவது ஒரு பஸ்ஸை வெளியே எடுத்து நாமே ஓட்டிக் கொண்டு நம் ஊருக்குப் போனால் என்ன?''என்று கேட்க முழு போதையில் இருந்த அடுத்தவன்,''நானே சென்று பேருந்தை எடுத்து வருகிறேன்,''என்று கூறி உள்ளே சென்றான்.நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வரவில்லை.திடீரென பல பேருந்துகளை இடித்துக் கொண்டும் சேதப்படுத்திக் கொண்டும் ஒரு பேருந்து வெளி வந்தது.அதை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.''ஏண்டா இவ்வளவு நேரம்?''என்று இவன் கேட்க அவன்  சொன்னான்,''என்ன செய்வது? நம்ம ஊருக்குப் போற பேருந்தைக் கடைசியில் நிறுத்தி வச்சிருந்தாங்க.அதைத் தேடி எடுத்து வர தாமதமாயிருச்சி,''

விதண்டாவாதம்

3

Posted on : Friday, November 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ராமு சோமுவிடம்,''இரண்டு நண்பர்கள் ஆற்றுக்குப் போகிறார்கள்.ஒருவன் சுத்தமாக இருக்கிறான்.மற்றவன் மிகவும் அழுக்குடன் இருக்கிறான்.இருவரில் யார் ஆற்றில் குளிப்பார்கள்?''என்று கேட்டான்.சோமு சொன்னான்,''இது என்ன கேள்வி?அழுக்கானவன்  தான் குளிப்பான்.''ராமு சொன்னான், ''அல்ல. அழுக்கானவன் அந்த அழுக்குக்குப் பழகி விட்டான்.அதனால் சுத்தமானவன்  தான் தன்னை மீண்டும் சுத்தப் படுத்திக்கொள்ள குளிப்பான். பரவாயில்லை, அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.இருவரில் யார் குளிப்பார்?''சற்று யோசித்த சோமு,''சுத்தமானவன்  தான் மீண்டும் குளிப்பான்.''என்றான்.ராமு சொன்னான்,''இது சரியான பதில் அல்ல.சுத்தமானவன் ஏன் குளிக்க வேண்டும்?அழுக்கானவன் தான் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ளக் குளிக்க வேண்டும்.பரவாயில்லை மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறேன். இருவரில்  யார் குளிப்பார்?''சுதாரித்துக் கொண்ட சோமு சொன்னான், ''இருவரும்  தான் குளிப்பார்கள்.அழுக்கானவன்,தனது அழுக்கைப் போக்கிக் கொள்ள:சுத்தமானவன் இன்னும் சுத்தமாகிக் கொள்ள. ''ராமு சொன்னான், ''தவறு.இருவரும் ஏன் குளிக்க வேண்டும்?சுத்தமானவன் குளிக்க வேண்டியதில்லை.அழுக்கானவன் ஏற்கனவே அழுக்குடன் பழகி விட்டான்.

எட்டாவது அதிசயம்

1

Posted on : Thursday, November 22, 2012 | By : ஜெயராஜன் | In :

காதலன்:கண்ணே,நீதான் உலகின் எட்டாவது அதிசயம்.
காதலி:மீதி ஏழு அதிசயங்களாக நீ கருதும் பெண்கள் யார்,யார்?
********
குடிகாரக் கணவனைப் பார்த்து மனைவி ஆதங்கத்துடன் சொன்னாள் ,''நீ குடிப்பதை விட்டுவிடு. அது கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் வியாதி.''
கணவன் அமைதியாக சொன்னான்,''நான் ஒன்றும் உடனே சாக வேண்டும் என்று நினைக்கவில்லையே !.மெதுவாகவே செத்துக் கொள்ளலாம்.
********
இரண்டு குடிகாரர்கள் நன்றாகக் குடித்துவிட்டு தள்ளாடி நடந்து வந்தனர். வழியில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது.நடந்து கொண்டே  கண்ணாடியில்  தெரியும் தங்கள் உருவங்களைப் பார்த்ததும் ஒருவன் சொன்னான்,''அதோ நிற்கிறார்களே, அவர்களை எங்கோ பார்த்த மாதிரித் தெரிகிறதே.நாம் அவர்களிடம் போய் பேசுவோமா?''அடுத்தவன் சொன்னான்,''அவசரப்படாதே!அவர்களே நம்மை நோக்கித்தான் வருகிறார்கள்.;;
********
ஒருவர் தனது வீட்டை மாற்றுவதற்காக தன்னுடைய பொருட்களை யெல்லாம் ஒரு திறந்த வேனில் ஏற்றினார்.வேன் கிட்டத்தட்ட நிறைந்து விட்டது.கடைசியாக தனது கிளியைக் கூண்டுடன் வைக்க இடம் பார்த்து,சரியான இடம் இல்லாததால் வேறு வழியின்றி எல்லாவற்றுக்கும் மேலே  தூக்கி வைத்தார் .போகும் வழியில் கிளிக் கூண்டு வேனின் ஆட்டத்தில் நழுவிக் கீழே விழுந்தது.உடனே வண்டியை நிறுத்தி கூண்டை எடுத்து மறுபடியும் மேலே வைத்து விட்டு வண்டி புறப்பட்டது.அந்த சாலை  சரியில்லாததால் வழி  நெடுக அந்தக் கூண்டு கீழே விழவும் அவர் எடுத்து வைப்பதுமாக இருந்தார்.ஆறாவது முறை கீழே விழுந்தபோது அதை எடுத்து வைக்க வந்தவரிடம் கிளி சொன்னது, ''அய்யா, போதும், நிறுத்துங்க! தயவுசெய்து நீங்க போற வீட்டு முகவரியை என்னிடம் கொடுத்து விடுங்கள்.நான் நடந்தே விசாரித்து அந்த வீட்டுக்கு வந்து சேர்கிறேன்.''
********

பிரச்சினைகளிலிருந்து விடுபட

1

Posted on : Thursday, November 22, 2012 | By : ஜெயராஜன் | In :

1 உங்களுக்குள்ள அறிவுத்திறன் மீது நம்பிக்கை வையுங்கள்.
2 தேவைக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
3 மற்றவர்களுடன் உங்களை எப்போதும் ஒப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.
4 வாழ்க்கைத் தேவை எவை என்பதை முடிவு செய்து அதனை முறைப்படி செயல் படுத்துங்கள்.
5 அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஒரு அலுவலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
6 தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
7 உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் நண்பர்களிடமு உ ண்மையான அன்பை செலுத்துங்கள்.
8 பெயர் சொல்லக் கூடிய அளவில் உழையுங்கள்.உங்கள் வாழ்வில் நடந்த நல்ல சம்பவங்களை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
9 மனத்தைக் கெடுக்கக் கூடிய ,தேவையற்ற,மோசமான நண்பர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
10 சிந்தனைகள் தேவைதான்.அதற்காக முடிவற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
11 ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் கற்றவர்களிடமோ,உங்களுக்கு நெருங்கியவர்களிடமோ,உங்களைவிட அத்துறையில் விவரமாய் இருப்பவர்களிடமோ யோசனை கேட்கத் தயங்க வேண்டாம்.

அறிவாளி

3

Posted on : Wednesday, November 21, 2012 | By : ஜெயராஜன் | In :

அறிவாளி ஒருவர் ஒரு தவறு செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதே அறையில் ஒரு திருடனும் அடைக்கப்பட்டிருந்தான்.திருடன் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டான்.இதை அறிந்த அறிவாளி தன்னையும் சேர்த்துக் கொள்ள சொன்னார்.சிறிது தயக்கத்துடன் அவன் ஒத்துக் கொண்டான்.நள்ளிரவில் திருடன் மெதுவாக சிறையின் பின்புறம் இருளான ஒரு பகுதிக்கு சென்று ஒரு பெரிய கயிறை  சுவரின் மீது போட்டு அதன் மீது ஏறலானான்.அறிவாளியும் பின் தொடர்ந்தார்.அப்போது அந்தப் பக்கம் வந்த வார்டன் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று உஷாராகி ,''யாரது அங்கே?''என்று சப்தம் கொடுத்தார்.திருடன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, 'மியாவ்'என்று கத்தியவாறு சுவற்றிலிருந்து வெளியே குதித்து விட்டான். வார்டனும் பூனை தான் திறிகிறது  என்று எண்ணி திரும்ப நடந்தார்.இப்போது அறிவாளி கயிற்றின் மீது ஏறவே மீண்டும் சப்தம் கேட்கிறதே என்று உணர்ந்து வார்டன் திரும்ப வந்து,''என்ன சப்தம்?யாரது?''என்று கத்தினார்.அறிவாளி புத்திசாலித்தனமாக சொன்னார்,''இது இரண்டாவது பூனை!''

நிதானம்

5

Posted on : Wednesday, November 21, 2012 | By : ஜெயராஜன் | In :

எத்தனை முறை அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறோம்!அதற்கான தண்டனையை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்!ஆனாலும் நாம் சாமானியமாய் மாறுவதில்லை.எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு முரட்டுத்தனமான தீர்வையே முதலில் மேற்கொள்கிறார்கள்,சில பேர்.வேறு வழியே இல்லாவிடில் கடைசி பாணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று ஏனோ அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஒரு பிரச்சினை வந்ததுமே அதைத் தீர்க்க என்னென்ன வழியெல்லாம் உண்டு என்று சிந்திக்கத் துவங்குபவனே புத்திசாலி.ஒவ்வொரு வழியையும் தீர ஆலோசித்து அது எப்படி முடியும் என மறுப்பு அசை போட்டு கடைசியில் எது சிறந்த வழியோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டும்.
உடலில் கொசு உட்கார்ந்ததும் அதைப் பட்டென்று அடிப்பதுபோல ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தால் வரும் தொல்லை முன்னிலும் பலம் அதிகரித்து இருக்கும்.பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன.அவற்றுள் எது ஆபத்துக் குறைவான வழியோ அதைத்தான் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
மிக எளிதாக இருக்கிறதே என்று பலர் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.சற்றே சுற்றிப் போனாலும் பரவாயில்லை என்று நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம்.
பரபரப்பு அடைவதாலும் அவசரப் படுவதாலும் ஒரு வேலையும் ஆவதில்லை. அப்படி தப்பித்தவறி ஆகிற வேலையும்  அபத்தமாகவோ, ஆபத்தனமானதாகவோதான் இருக்கும்.இந்தப் பரபரப்பிலும் குழப்பத்திலும் இருப்பவர்கள்தான் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை,''என்றும்,'எனக்குக் கையும் ஊட வில்லை,காலும் ஓடவில்லை'என்றும் புலம்புகிறார்கள்.இது கூடத் தேவலை சிலர் நிதானத்தை இழக்கும்போது நாம் என்ன செய்கிறோம்,என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.
தோன்றியதைச் செய்துவிடுவோம்,.அப்புறம் வருவது வரட்டும் என்கிற மன நிலையும் தவறு.எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் செயலாலும் சொல்லாலும் நிதானத்தை இழந்து விடக் கூடாது.நிதானத்தை இழக்காதவர்கள்,மற்ற அனைத்தையும் காப்பாற்றத் தெரிந்தவர்கள்.

சஞ்சீவினித் தைலம்

1

Posted on : Tuesday, November 20, 2012 | By : ஜெயராஜன் | In :

சாலையில் ஒரு மனிதன் பாட்டில்களில் பச்சை நிறத்தில் திரவியம் நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிறுவன் உதவி செய்து கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது. வியாபாரி சுற்றிலும் இருந்தவர்களிடம்,''இது ஒரு சஞ்சீவினித் தைலம்.இதை சாப்பிட்டால் பல நூறாண்டுகள் வாழலாம்.என்னைப் பாருங்கள்!நான் தினமும் ஒரு பாட்டில் அளவு இதைக் குடிக்கிறேன்.என் வயது இப்போது எழுநூறு,''என்றான்.எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். யார் முகத்திலும் நம்பிக்கையின் ரேகை கூட இல்லை. கூட்டத்தில் ஒருவன் மெதுவாக வியாபாரியுடன் கூட இருந்த சிறுவனை மெதுவாகத் தள்ளி அழைத்துச் சென்று,''அந்த ஆள் சொல்வது உண்மையா? அவருக்கு வயது எழுநூறா ?''என்று கேட்டான்.அந்தப் பையன்,''என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது,''என்றான்.உற்சாகம் அடைந்த அந்த நபர்,''உண்மையைச் சொன்னால்  உனக்கு நான் ஒரு பரிசு தருவேன்,''என்றான் .அந்த சிறுவன் சொன்னான்,''நான் அவரிடம் முன்னூறு ஆண்டுகளாகத்தான் வேலை செய்கிறேன்.அதனால் அவரின் உண்மையான வயது எனக்குத் தெரியாது,''வியாபாரியை விடப் பெரிய எத்தன்!

மனோவசியம்

2

Posted on : Tuesday, November 20, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப் போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.அவன் தனது  நண்பராகிய மனோவசிய மருத்துவரை அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம் என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில் படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை ஆரம்பித்தார்.''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத் திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி  வந்தது.அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை அறைக்கு மறுபடியும் வந்தான்.முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.

கஷ்டம் தெரியாமல் வளர்க்கலாமா?

1

Posted on : Monday, November 19, 2012 | By : ஜெயராஜன் | In :

'' வாழ்க்கையில் நான் மிகவும் துன்பப்பட்டு விட்டேன்.என் பிள்ளைகளாவது கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும்,''என்று பலர் சொல்வதுண்டு. அப்படிஎன்றால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் படுகிற கஷ்டத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்று தானே பொருள்.இந்த மனப்போக்கை வளர விடுவது நல்லதல்ல.எதிர்காலத்தில் அவர்களால் சிக்கனமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.எவ்வளவு வந்தாலும் அதை செலவழிக்கும் மனோபாவமும் வளரும்.தங்கள் பிள்ளைகள் மனம் நோகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுப்பதனால் பிள்ளைகளுக்குக் கடைசி வரை ஒரு பொருளின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.
பிள்ளைகளுக்கு விபரம் தெரிய ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாப்பது எப்படி என்பதனை உணர்த்த வேண்டும்.அது மட்டுமல்ல.நம் சக்திக்கு உட்பட்ட விஷயங்கள் எவை,அப்பாற்பட்டவை எவை என்பதும் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.பிள்ளைகளிடம் நமது வருமான விபரங்கள்,கடன்,வரவிருக்கும் செலவினங்கள் ஆகியவை பற்றி விவாதிப்பது நல்லது.கோடிகோடியாய் பணம் இருந்தாலும் பணத்தின் அருமையை உணர்த்துவதில் தவறில்லை.தேவை ஏற்பட்டால் இந்த உயரிய நிலையை அடைய தாம் பட்ட துன்பங்களைப் பெற்றோர்கள் எடுத்துச் சொல்லலாம்.
நம்மை விட நமது சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை.அதற்காக அவர்கள் எதிர் பார்ப்பதையெல்லாம் உடனுக்குடன் செய்து கொடுத்து ஏதோ,அலாவுதீனின் அற்புத விளக்கு கொண்டு சுலபமாக எடுத்துக் கொடுக்கிறோம் என்கின்ற எண்ணம் நம் தலைமுறைக்கு வந்து விடக்கூடாது.

பொன்மொழிகள் 35

5

Posted on : Sunday, November 18, 2012 | By : ஜெயராஜன் | In :

சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.
********
நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான் விளையும்.
********
குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
********
  உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.
********
வெளியே  காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.
********
ஒரு பூனை திருட்டுப் போயிற்று என்று சட்டத்தின் உதவியை நாடினால்
ஒரு பசுவை விற்கே வேண்டிய நிலை வந்துவிடும்.
********
எக்காரியத்தையும் தயங்கித் தயங்கிச் செய்பவன்
ஒரு காரியத்தையும் செய்து முடிக்க மாட்டான்.
********
தவறாக புரிந்து கொள்கிற உண்மையைக் காட்டிலும் பெரிய பொய் வேறு எதுவும் இல்லை.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்துவிட்டால், முன்னால்  சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப் படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன.முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
********
துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை துயரம் அடைகிறான்.
********
புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.
********

திருமண ஆசை

2

Posted on : Friday, November 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.உடனே ஒரு தரகரை அணுகினான்.அவரும் சொன்னார்,''ஒரு அழகான பெண் இருக்கிறாள்.பணம் அவளிடம் நிறைய இருக்கிறது. என்ன, உன்னை விட வயது கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.அவள் ஒரு விதவை.''அவனும் சம்மதித்து பெண்ணைப் பார்க்கப் போனார்கள்.பெண்ணைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி.அந்தப் பெண் மிக அவலட்சணமாக இருந்தாள். .மெதுவாக தரகரின் காதருகே சென்று அவன் மெல்லிய குரலில் கேட்டான்,''இந்தப் பெண்ணையா  அழகான பெண்  என்று சொன்னீர்கள்?'' தரகர் சொன்னார்,''எது வேண்டுமானாலும் சப்தம் போட்டே கேளுங்கள்.பிரச்சினை இல்லை.பெண்ணுக்கு சுத்தமாகக் காது கேட்காது.''
********
ஒரு பெண் ஓவியர் பிக்காசோவைப் பார்க்க வந்தாள்.அவள் அவரிடம்,''எனக்கு உங்கள் ஓவியங்கள் என்றால் உயிர்.எனக்கு உங்களது ஓவியங்கள் இரண்டு வேண்டும்.''என்று ஆர்வத்துடன் கேட்டாள் .பிக்காசோ உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து,''அம்மா,இப்போது ஒரு ஓவியம்தான் கைவசம் இருக்கிறது,''என்றார்.அந்தப் பெண்ணோ விடாப்பிடியாக,''எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை.எனக்கு இப்போது இரண்டு ஓவியங்கள் அவசியம் வேண்டும்,''என்றாள் .பிக்காசோ அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார்.அந்தப் பெண் ஓவியத்தில் அவ்வளவு விபரம் தெரிந்தவள் இல்லைஎன்று தெரிந்து கொண்டார்.ஆனால் ஜம்பத்திற்காக இரண்டு ஓவியங்கள் உடனே தேவையென்று கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு உள்ளே சென்றார்.தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை இரண்டாகக் கிழித்தார்.பின் வெளியே வந்து இரண்டையும் அவளிடம் கொடுக்க  அவளும் அதிகப் பணத்தைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்துசென்றாள் .
********
ஒருவன் தனது நண்பனிடம் கவலையுடன் சொன்னான்,''தினசரி கனவினில் பிரபலமான நடிகை............என் கனவில் வருகிறாள்.உடனே அலறிக்கொண்டு நான் எழுகிறேன்,''நண்பன் கேட்டான்,''அழகான அந்த நடிகை வந்தால் நீ மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்.நீ ஏன் அலறுகிறாய்?''அவன் சொன்னான்,''அவள் தினசரி என் அறைக்குள் வந்ததும் கதவைப் படீரென சாத்துகிறாள்.அந்த சப்தத்தில் நான் பயந்து அலறி விடுகிறேன்.''
********

சரியான நேரம்

3

Posted on : Friday, November 16, 2012 | By : ஜெயராஜன் | In :

மன நலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கடிகாரத்தில் பன்னிரண்டு காட்டியது.அதைப் பார்த்து ஒருவர் சொன்னார்,''இப்போது நடுப்பகல் 12மணி.''அடுத்தவர் சொன்னார்,''இல்லை,இல்லை,இப்போது நடு இரவு 12 மணி.''இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சப்தம் கேட்டு வார்டன் அந்தப் பக்கம் வந்து என்னவென்று கேட்டார்.அவர்கள் இப்போது பகல் 12 மணியா,இரவு 12 மணியா என்று கேட்டனர்.அவர் உடனே தனது கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, ''எனது கடிகாரம் ஓடவில்லையே!எப்படி சொல்வது?''என்றார்.அங்கேயே வேலை பார்த்து அவருடைய மனநிலையும் அப்படித்தான் ஆயிற்று போலும்!
********
அப்பா:மகனே,வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவேன் என்று சொல்கிறாயாமே,அம்மா சொல்கிறாள்!
மகன்:ஆமாம்,இப்ப அதுக்கென்ன?
அப்பா:இல்லை.எப்பவென்று சொன்னால் நானும் உன் கூட வந்து விடலாமே என்று பார்க்கிறேன்.
********
சொர்க்கத்திற்கு வந்து சேர்ந்த ஒருவன் அந்த சூழ்நிலையைப் பார்த்துவிட்டு மிக மகிழ்ச்சியாக இருந்தான்.அடிக்கொரு தடவை,''எத்தனை அமைதி, எவ்வளவு நிம்மதி!,''என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.திரும்பத் திரும்ப அதைக்கேட்டு புளித்துப் போனதால் சொர்க்கத்தின் தலைவன் அவனை நரகத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கும் அவன்,''எத்தனை அமைதி,எவ்வளவு நிம்மதி!''என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.சொர்க்கத்தின் தலைவனும் நரகத்தின் தலைவனும் ஒன்றும் புரியாமல்,''என்னடாஇது அதிசயம்!சொர்க்கமும் நிம்மதி,நரகமும் நிம்மதி என்கிறாயே,ஒன்றுமே புரியவில்லை''என்றனர்.அவன் சொன்னான்,''பூலோகத்தில் என் மனைவியுடன் 50 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள்!''
********
மனைவியின் மீது சந்தேகம் கொண்ட ஒருவன் ஒருநாள் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தான்.அவன் மனைவி அப்போது கட்டிலில் படுத்திருந்தாள். அவனுக்கு ஏதோ அவள் தவறு செய்கிறாள் என்று தோன்றவே அவளை திட்ட ஆரம்பித்தான்.அதற்கு மனைவி ,''நீங்கள் என்னை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.இதையெல்லாம் மேலேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவனுக்குதான் உண்மை தெரியும்,''என்று கூறி அழுதாள் .கணவனுக்கே சிறிது இரக்கம் தோன்றியது.அப்போது மேலே பரணிலிருந்து ஒருகுரல் கேட்டது,''எனக்கு ஓரளவுதான் தெரியும்.கட்டிலுக்கு கீழே இருப்பவனிடம் கேட்டால் முழு விபரம் தெரியும்.''
********

ஊதாரி

2

Posted on : Wednesday, November 14, 2012 | By : ஜெயராஜன் | In :

கருமி ஒருவன் இருந்தான் அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள்.ஒருநாள் பையன் முடி அதிகம் வளர்ந்து விட்டது என்று சொல்லி முடி வெட்டக் காசு கேட்டான்.அதற்கு அவன்,''போ,போ,காசு இங்கே காய்த்தா தொங்குகிறது?'' என்று கூறி காசு தர மறுத்து விட்டான்.வருத்தம் அடைந்த சிறுவன்,மறுநாள் முடி வெட்டாமல் போனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணியவாறு அவர்களது தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுந்தது.அவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது.உடனே அந்த தேங்காயை  எடுத்துக் கொண்டுபோய் முடி திருத்துபவரிடம் கொடுத்து,தேங்காயைப் பெற்றுக் கொண்டு முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டான்.பையனின் தகப்பனின் கருமித்தனத்தை அறிந்த முடி திருத்துபவரும் அனுதாபப்பட்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு முடி வெட்டி விட்டார்.முடி வெட்டியிருந்த பையனைக் கண்ட தந்தை அதிர்ந்தார்.ஆத்திரத்துடன் பணம் ஏது  என்று கேட்க பையனும் உண்மையை சொல்லிவிட்டான்.நீண்ட நேரம் கவலையுடன் அமர்ந்திருந்த கருமி எழுந்து பையனிடம் சொன்னான்,''நான் சிரமப்பட்டு பணம் சேர்க்கிறேன்.நீங்கள் எல்லாம் ஊதாரித்தனமாய் செலவு செய்கிறீர்கள்.நான் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்.இன்று முதல் நானும் ஊதாரியாய் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.''பின் தனது  அறைக்கு சென்று ஒரு பெட்டியிலிருந்து ஒரு பட்டு வேஷ்டியை எடுத்தான்.மகனிடம் சொன்னான்,''இது என் கல்யாணத்திற்கு என் மாமனார் கொடுத்தது.இதை கடந்த 15 ஆண்டுகளாக நான்  உபயோகிக்காமல் பாதுகாத்து வந்தேன் .இன்று முதல் அதை உடுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்.''

நம்பிக்கைதான்.

2

Posted on : Wednesday, November 14, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அந்தணர் தினசரி ஆற்றைக் கடந்து சென்று இறுதிக் கடன்களுக்கான சடங்குகளை செய்து தனது  வாழ்க்கையை நடத்தி வந்தார்.தேவையான அளவுக்கு வருமானம் வந்த போதிலும் அவர் எதுவும் செலவழிக்க மாட்டார்.சரியான கஞ்சன்.ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வேலைக்கு புறப்பட்டார்.அவர் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பணம் வருமே என்ற ஒரே எண்ணத்தில் அவர் கிளம்பி விட்டார்.போகும்போது கழுத்தளவு நீரில் சிரமப்பட்டு நடந்து அக்கறை போய் அன்றைய வருமானத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வரும்போது ஆற்றில் சகதியில் மாட்டிக் கொண்டார். அவருடைய அலறல் கேட்டு இரக்க குணம் உடைய ஒருவர் ஆற்றில் குதித்து அவரை சகதியிலிருந்து மீட்டார்.அவருக்கு நன்றி சொன்ன அந்தணர் திடீரென மறுபடியும் சகதியில் குதித்து விட்டார்.உதவி செய்த நபர்  இந்த அந்தணர் மன நிலை சரியில்லாதவரோ என்று எண்ணிக் கொண்டே அவரது சுபாவத்தினால்  மறுபடியும் அவரை சகதியில் இருந்து காப்பாற்றினார். கரைக்கு வந்ததும் அந்தணரிடம் மீண்டும் ஏன் சகதியில் குதித்தார் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்,''சகதியில் நான் மாட்டிக் கொண்ட போது போது இன்று நான் சம்பாதித்த நூறு ரூபாய் நோட்டு சகதியில் விழுந்து விட்டது.நீங்கள் நல்லவராய் தெரிவதால் மறுபடியும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மறுபடியும் குதித்து ரூபாய் நோட்டைக் கண்டு எடுத்து விட்டேன்.''

கர்வபங்கம்

2

Posted on : Monday, November 12, 2012 | By : ஜெயராஜன் | In :

அறிஞர் ஒருவர் இருந்தார்.பல நூல்களையும் அவர் கற்றிருந்தார். பல  இடங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைப் பார்த்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டது.ஒரு முறை அவர் வெளியூர் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு அவரை யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாரும் வந்து பார்க்கவில்லை.நிறையப் படித்தவர்களிடம் ஒரு குறை இருக்கும்.அதாவது அவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை  யாரிடமாவது சொல்லி தங்கள் மேதாவித் தனத்தை வெளிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இந்த அறிஞரும் அதற்கு விதிவிலக்கல்ல.யாரும் வந்து பார்க்காதபோது யாரிடம் தனது  அறிவை வெளிப்படுத்துவது?அப்போது அங்கு ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து தீக் குச்சியால் அதை ஏற்றினாள் .அறிஞருக்கு அந்தக் குழந்தையிடமாவது தனது திறமையைக் காட்ட ஆசை வந்தது.அந்தக் குழந்தையை அழைத்து,''பாப்பா,இங்கு இருட்டாக இருந்தது.நீ  மெழுகுவர்த்தியை எற்றின உடனே வெளிச்சம் வந்தது.,அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது?''என்று கேட்டார்.அந்தக் குழந்தை உடனே தனது வாயினால்  ஊதி மெழுகு வர்த்தியை அணைத்தது.பின் அவரிடம் கேட்டது,''சிறிது நேரம் முன் வெளிச்சம் இருந்தது,.மெழுகுவர்த்தியை அனைத்ததும் அந்து வெளிச்சம் எங்கே போனது?''அந்த அறிஞர் திணறி விட்டார்.அப்போதுதான் தனக்கு எல்லாமே தெரியாது என்பதனை உணர்ந்தார். அவருக்கு ஞானம் ஏற்பட்டது.

முன்னேற்றம்

4

Posted on : Sunday, November 11, 2012 | By : ஜெயராஜன் | In :

முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த பேச்சாளர். இலக்கியவாதியும்  கூட.அவருடைய சேவையைப்ப் பாராட்டி ஒரு பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.ஏற்புரை கூற வந்த அவர் ''ஆண்களுக்கு சமமாக பெண்களை முன்னேற்ற செய்ய வேண்டும் என்று பாடு பட்டு வந்தோம்.ஆனால் இப்போது பெண்களுக்கு சமமாக ஆண்களை முன்னேற்ற வேண்டிய நிலை வந்து விட்டது,''என்று கூறி பேச்சை சில நொடிகள் நிறுத்தினார்.எல்லோரும் ஆவலுடன் அவரை நோக்க அவர் தொடர்ந்தார்,''உதாரணத்துக்கு என் மனைவியை சொல்லலாம்.அவர் 25 ஆண்டுகளுக்கும் முன்னரே டாக்டராகி விட்டார்.நான் இப்போதுதான் டாக்டராகியுள்ளேன்.''(அவரது மனைவியின் பெயர் டாக்டர் விசாலாக்ஷி நெடுஞ்செழியன்.)
********
ஜின் காக்டு என்பவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்.அவரிடம் ஒரு நண்பர்,''உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உண்டா?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''உறுதியாக நம்புகிறேன்.எனக்கு பிடிக்காதவர்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?''
********

உன்னை விட மாட்டேன்!

2

Posted on : Sunday, November 11, 2012 | By : ஜெயராஜன் | In :

தனது  வருமானத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக செலவு செய்யும் ஒரு மனிதனுக்கு வாய்த்த மனைவியோ கடும் சிக்கனக்காரி.அந்த மனிதன் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்.தான் இறந்தபின் தன் கல்லறை கூட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் தான் இறந்து விட்டால் தன் மனைவி நன்கு செலவு செய்து தனது விருப்பப்படி கல்லறையை அமைக்க மாட்டார் என்று திடமாக நம்பினார்.எனவே அவர் உயிருடன் இருக்குபோதே ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை வைத்து நிறைய செலவு செய்து தனக்கென்று  ஒரு கல்லறையை அமைத்தார்.அந்தக் கல்லறையில் ''அமைதியாக ஓய்வெடு ''என்றும் கல்லிலே அழகாக எழுத ஏற்பாடும் செய்தார்.சில மாதங்களில் அவர் இறந்து போனார்.அவர் உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.உயிலில் அவர்,''வாழ்க்கையை நான் நன்கு அனுபவித்தேன்.நான் எதுவும் சேமிக்கவில்லை. நான் யாருக்கும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை.''என்று குறிப்பிட்டிருந்தார்.அதைக் கேட்டவுடன் அவர் மனைவிக்கு வந்ததே கோபம்!அவர் நேரே கல்லறைக்கு சென்றார்.''அமைதியாக ஓய்வெடு ''என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தார்.உடனே ஒரு ஆளை வரவழைத்து அந்த வாக்கியத்துக்கு முன்,''நான் வரும்வரை''என்பதனை சேர்த்து விட்டார். .

நம்ப முடியவில்லை

3

Posted on : Saturday, November 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார்.அவர் பெயர்,'நம்ப முடியவில்லை'.அவர் தனது மனைவியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவர் வயதாகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னார்''அந்தக் காலத்தில் என்ன காரணத்தினாலோ எனக்கு இப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.இந்தப் பெயர் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.ஆனால் இதுவரை அதைத் தவிர்க்க முடியவில்லை.இறந்த பின்னாவது என் கல்லறையில் நான் வெறுக்கும் இந்தப் பெயரை எழுதாது வேறு ஏதாவது என்னைப் பற்றி எழுத ஏற்பாடு செய்,''அதேபோல அவர் இறந்ததும்,அவரது கல்லறையில் ,''தன்  மனைவியிடம்  கடைசி வரை விசுவாசமாக இருந்த அற்புதமான மனிதர்''என்று அவரது மனைவி எழுத வைத்தாள் .ஆனால் அந்தோ பரிதாபம்!அதன்பின் அந்தப் பக்கம் போவோர்,வருவோர் எல்லாம் அதைப் படித்துவிட்டு ''நம்ப முடியவில்லை''என்று சொல்லிச் சென்றார்கள்.
********
ஒரு பெண் தனது தோழியிடம் சொன்னாள் ,''என் கணவர் என்னை எப்போதும் பைத்தியமாய் காதலிக்கிறார்,''தோழி கேட்டாள் ,''அவர் எப்போதாவது புத்தி சுவாதீனமாய்  இருப்பாரா ?''
********

மயக்க மருந்து

3

Posted on : Friday, November 09, 2012 | By : ஜெயராஜன் | In :

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்க மருந்தின் வீரியம் குறையாத நிலையில் இருந்த கணவன் அருகில் மனைவி வந்தாள்.சிறிது  மயக்கம் குறைந்ததும்  லேசாகக் கண் விழித்த கணவன் மனைவியைக் கண்டதும்,''நீ மிக மிக அழகாய் இருக்கிறாய் ''என்றான்.அந்த நிலையிலும் தனது  அழகை கணவன் புகழ்ந்ததில் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி.அரை மயக்கம் தெளிந்த நிலையில் மீண்டும் கண் விழித்த கணவன்,''இன்று நீ பரவாயில்லாமல் இருக்கிறாயே.''என்று மனைவியிடம் சொன்னான்.அவள் டாக்டரிடம்  ,''முதலில் என்னை மிக அழகாக இருப்பதாக சொன்ன அவர் இப்போது பரவாயில்லை என்று குறைத்து மதிப்பிடுகிறாரே,''என்று அங்கலாய்த்தாள். டாக்டர் சொன்னார்,''மயக்க மருந்தின் குணம் குறையக் குறைய அவருக்கு நிதானம்  அதிகமாகும்,''என்றார்.
********
ஒரு செய்தி வந்தால் ஒரு ஆண் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுவான்.அதே சமயம் ஒரு பெண் ஒரு செய்தியை இரு காதிலும் வாங்கி வாய் வழியே வெளிவிடுவாள்.
********
தனது பக்தனின் பக்தியை மெச்சிய இறைவன் ,''உனக்கு என்ன வேண்டுமானாலும்  கேள்.உடனே கொடுக்கிறேன்.ஆனால் உன் எதிரியான பக்கத்து வீட்டுக்காரனுக்கு அதுவே இரண்டு மடங்காகக் கிடைக்கும்,''என்றார்.உடனே பக்தனும் தனக்கு ஒரு அழகிய வீடு கேட்டான்.அவனுக்கு ஒரு வீடும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு வீடும் கிடைத்தது.அடுத்து பக்தன் ஒரு விலை உயர்ந்த கார் கேட்க அவனுக்கு ஒன்றும் அவன் எதிரிக்கு இரண்டு காரும் கிடைத்தன.கடுப்பான பக்தன்,''என்னுடைய ஒரு சிறு நீரகத்தை நான் தானமாகக் கொடுக்க வேண்டும்,''என்றான்.
********

சிரிப்

4

Posted on : Tuesday, November 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர்:ஏண்டா கோபு,உன் கண்ணாடியை நான் வரும்போது மட்டும் போட்டுக் கொள்கிறாய்,மற்ற நேரம் போடுவதில்லையே.ஏன்?
கோபு :தலைவலி வரும்போது மட்டும் போட்டால் போதும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்,சார்.
********
ஒருவர்:இரண்டு தாரம் மணம் புரிந்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
மற்றவர்:இரண்டு மாமியார்.
********
''தம்பி,உன் பெயர் என்ன?''
'மை நேம் இஸ் பூரண சந்திரன்.'
''நான் தமிழில் கேட்டால்,உன் பெயரை தமிழில்தானே சொல்ல வேண்டும்?''
'சரி,என் பெயர் முழு நிலவு.'
********
காவல் நிலையத்துக்கு ஒருவர் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்க வந்திருந்தார்.ஏதோ பிரச்சினையில் இருந்த காவலர்,''எனையா காலங்கார்த்தால பல்லுக் கூட விளக்காம புகார் கொடுக்க வந்திட்டயா ?''என்று கேட்டார்.வந்தவர்  சொன்னார்,''வேறு வழியில்லை,சார்.திருட வந்தவன் என் டுத் பிரசையும் எடுத்து சென்று விட்டான்.''
********
''மச்சி,நான் என் மனைவியை விவாகரத்து பண்ணப்போறேன்டா.''
'ஏண்டா திடீரென்று?'
''பின்ன என்னடா,மூன்று மாதமா என்கிட்டே அவள் பேசுவதே இல்லை.''
'மச்சி,நல்லா யோசிச்சுக்கடா,இந்த மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டாடா.அவனவன் தன்  மனைவி பேச்சை நிறுத்த மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான்.நீ என்னடான்னா.'
********

கணவன் வேண்டுமா?

3

Posted on : Monday, November 05, 2012 | By : ஜெயராஜன் | In :

மேரி கோரல்லி என்று ஒரு ஆங்கில நாவல் ஆசிரியை இருந்தார்.அவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.அவருடைய சினேகிதி ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.அதற்கு அவர் சொன்னார்,''நான் செல்லமாக ஒரு நாய்,கிளி,பூனை வளர்க்கின்றேன்.அவை என்னிடம் அன்பாக இருக்கின்றன.ஒரு நாய் வளர்க்கிறேன்.அது நாள் முழுவதும் குரைக்கிறது.கிளி ஒன்று வளர்க்கிறேன்.அது பகல் முழுவதும் திட்டுகிறது.பூனை ஒன்று வளர்க்கிறேன்.அது இரவு முழுவதும் வெளியே போய் விடுகிறது.இப்படி ஒரு கணவன் பல்வேறு தருணங்களில் செய்யக் கூடிய காரியங்களை இவை செய்து விடுகின்றன.பின் எதற்காக நான் மணம் செய்து கொள்ள வேண்டும்?''
********
ஒரு கூட்டத்தில் கல்கி பேசினார்.அவருக்கு முன் கிருஷ்ணசாமி அய்யரும்,டி .கே.சி.யும் பேசி முடித்திருந்தனர். கிருஷ்ணசாமி அய்யர் திருப்புகழை நன்கு படித்தவர்.டி.கே.சி.'ரசிகமணி' என்று அழைக்கப் பட்டவர்.கல்கி,''மேடையில் இந்தப் பக்கம் திருப்புகழ்  மணி.மறுபக்கம் ரசிகமணி.இடையில் நின்று பேசும் நானோ ஒரு பெண்மணி கூட இல்லையே!'' என்றதும் ஒரே கைதட்டல்.
********

சுயமரியாதை

1

Posted on : Sunday, November 04, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரபல ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு முறை இந்தியா வந்திருந்தார்.நண்பர்களுடன் கங்கை நதிக் கரைக்கு சென்றார்.மிக எதிர் பார்ப்புடன் வந்த அவர் கங்கை நீரைப் பார்த்துவிட்டு,''கங்கை நீர் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறதே?''என்று கேட்டார்.நண்பர்கள் விட்டுக் கொடுக்காமல் , ''பார்க்க அப்படித்தான் இருக்கும்.உங்கள் நாட்டு விஞ்ஞானிகளே இந்த நீரை சோதித்துப் பார்த்துவிட்டு இதில் எந்த நோய்க் கிருமியும் வாழ முடியாது என்று கூறி விட்டனர்,''என்றனர்.மார்க் ட்வைன் சிரித்துக் கொண்டே சொன்னார்,''சரிதான்.சுய மரியாதையுள்ள எந்த உயிர்க் கிருமியும் இதில் வாழ ஒத்துக் கொள்ளாது.''
********
விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்து பாராட்டியது.அந்த ஊர் மதுவுக்கு புகழ் பெற்றது.எனவே விருந்தில் மது தாராளமாகப் புழங்கியது.ஆனால் எவ்வளவோ வற்புறுத்தியும் ராமன் மது அருந்த மறுத்து விட்டார்.விருந்து முடிந்தவுடன் நண்பர்கள்,ராமன் மது குடிக்காமல் எப்படித் தப்பித்தார் என்று கேட்டார்கள்.அவர் சொன்னார்,''இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள்  மதுவில் 'ராமனின் விளைவு' எப்படியிருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.இன்று ராமனிடம் மதுவின் விளைவு எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்தார்கள்.''
********

துணிவு

2

Posted on : Friday, November 02, 2012 | By : ஜெயராஜன் | In :

'போர்க்காலக் கதாநாயகன்'என்று பெயர் பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கும் அவரது மருமகனுக்கும் கொஞ்சமும் ஒத்துப் போவதில்லை.ஒரு நாள் சர்ச்சிலின் நண்பர் அவரிடம் கேட்டார்,''போர் முடிவில் யார் அதிகம் பிரபலம் அடைவார்கள் ?''மருமகனைப் பற்றிய ஏதோ வெறுப்பில் இருந்த அவர்,''முசொலினி தான் பிரபலம் அடைவார் ,'' என்றார்.நண்பருக்கு அவர் பதிலினால் வியப்பு ஏற்பட்டது. அவருடைய பதிலுக்கான காரணத்தைக் கேட்டார்.சர்ச்சில் வெறுப்புடனேயே சொன்னார்,''முசொலினிக்குதான் தன்னுடைய மருமகனை சுடக் கூடிய தைரியம் இருந்தது.''நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
********
ஒரு நிருபர் பேரறிஞர் பெர்னாட்ஷாவிடம் கேட்டார்,''பெரிய அறிஞர்களுக்கெல்லாம் ஞாபக மறதி அதிகம் என்று நீங்கள் ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் அல்லவா?''ஷா அமைதியாக சொன்னார்,''எனக்கு ஞாபகம் இல்லையே!''
********