உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கஷ்டம் தெரியாமல் வளர்க்கலாமா?

1

Posted on : Monday, November 19, 2012 | By : ஜெயராஜன் | In :

'' வாழ்க்கையில் நான் மிகவும் துன்பப்பட்டு விட்டேன்.என் பிள்ளைகளாவது கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும்,''என்று பலர் சொல்வதுண்டு. அப்படிஎன்றால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் படுகிற கஷ்டத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்று தானே பொருள்.இந்த மனப்போக்கை வளர விடுவது நல்லதல்ல.எதிர்காலத்தில் அவர்களால் சிக்கனமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.எவ்வளவு வந்தாலும் அதை செலவழிக்கும் மனோபாவமும் வளரும்.தங்கள் பிள்ளைகள் மனம் நோகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுப்பதனால் பிள்ளைகளுக்குக் கடைசி வரை ஒரு பொருளின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.
பிள்ளைகளுக்கு விபரம் தெரிய ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாப்பது எப்படி என்பதனை உணர்த்த வேண்டும்.அது மட்டுமல்ல.நம் சக்திக்கு உட்பட்ட விஷயங்கள் எவை,அப்பாற்பட்டவை எவை என்பதும் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.பிள்ளைகளிடம் நமது வருமான விபரங்கள்,கடன்,வரவிருக்கும் செலவினங்கள் ஆகியவை பற்றி விவாதிப்பது நல்லது.கோடிகோடியாய் பணம் இருந்தாலும் பணத்தின் அருமையை உணர்த்துவதில் தவறில்லை.தேவை ஏற்பட்டால் இந்த உயரிய நிலையை அடைய தாம் பட்ட துன்பங்களைப் பெற்றோர்கள் எடுத்துச் சொல்லலாம்.
நம்மை விட நமது சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை.அதற்காக அவர்கள் எதிர் பார்ப்பதையெல்லாம் உடனுக்குடன் செய்து கொடுத்து ஏதோ,அலாவுதீனின் அற்புத விளக்கு கொண்டு சுலபமாக எடுத்துக் கொடுக்கிறோம் என்கின்ற எண்ணம் நம் தலைமுறைக்கு வந்து விடக்கூடாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

கஷ்டம் தெரியாமல் வளர்த்தால் / வளர்ந்தால்... கஷ்டம் என்வென்பதை நமக்கு உணர்த்துவார்கள்...

உண்மையான கருத்துக்கள்...

Post a Comment