உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கேள்வி-பதில்

1

Posted on : Thursday, November 29, 2012 | By : ஜெயராஜன் | In :

கேள்வி:''வாழ்க்கை என்பதே சோதனைகள் நிறைந்ததாயிருக்கிறது.என் வாழ்க்கையே சூனியமாகி  விட்டதாய் உணர்கிறேன்.அது ஏன்?
பதில்:பிரச்சினைகளை மிகைப் படுத்திப் பார்ப்பதும் தனது திறமைகளை உணர்ந்து செயல் படாததுமே இவ்வாறு நினைப்பதற்குக் காரணம்.
********
கேள்வி:செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த பிறகும் கூட மனதில் ஏதோ ஒரு குறை உறுத்திக் கொண்டேயிருக்கிறதே,அது ஏன்?
பதில்:குறைகளை மிகைப் படுத்தும் எதிர்மறைக் கண்ணோட்டம் உடையவர்களுக்கே இந்த எண்ணம் உருவாகும்.எதையும் நேர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகிப் பாருங்கள்.
********
கேள்வி:எல்லோரும் என்னைத் தனிமைப் படுத்தி விட்டார்களே?
பதில்:நம்ப வேண்டியவர்களை சந்தேகித்து விடுவதாலும், சந்தேகத்திற்குரியவர்களை நம்பி விடுவதாலும் ஏற்படும் விளைவே இது.
********
கேள்வி:எப்போதும் எனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது.அதற்கு என்ன செய்வது?
பதில்:மனதின் பயம்,மனதின் பதட்ட நிலை ஆகியவையே இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம்.நிதானத்தைக் கடைப் பிடித்துப் பாருங்கள்.
********
கேள்வி:நல்ல நிலையில் இருந்த நான் பிறர் சொல்லைக் கேட்டதால் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டேனே.
பதில்:தான் செய்த தவறுக்கு பிறர் மீது பழி சுமத்துதல்,மனதில் தெளிவின்மை ஆகியவையே காரணம்.தவறை ஏற்றுக் கொள்ளும் திறந்த மனப் பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:எனக்கு இளகிய மனம்.எதையும் என்னால் தாங்க முடிவதில்லை. கடந்த காலத்தை என்னால் மறக்க முடியவில்லை.
பதில்:சுமைகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.பிறர் மீது ஆற்றாமை கொள்ளாதீர்கள்.பிறர் குறைபாடுகளை எளிதில் மறக்கப் பழகுங்கள். நடைமுறைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளப் பழகுங்கள்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமையான கேள்விகள்-பதில்கள்...

நன்றி...

Post a Comment