உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பிரச்சினைகளிலிருந்து விடுபட

1

Posted on : Thursday, November 22, 2012 | By : ஜெயராஜன் | In :

1 உங்களுக்குள்ள அறிவுத்திறன் மீது நம்பிக்கை வையுங்கள்.
2 தேவைக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
3 மற்றவர்களுடன் உங்களை எப்போதும் ஒப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.
4 வாழ்க்கைத் தேவை எவை என்பதை முடிவு செய்து அதனை முறைப்படி செயல் படுத்துங்கள்.
5 அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஒரு அலுவலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
6 தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
7 உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் நண்பர்களிடமு உ ண்மையான அன்பை செலுத்துங்கள்.
8 பெயர் சொல்லக் கூடிய அளவில் உழையுங்கள்.உங்கள் வாழ்வில் நடந்த நல்ல சம்பவங்களை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
9 மனத்தைக் கெடுக்கக் கூடிய ,தேவையற்ற,மோசமான நண்பர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
10 சிந்தனைகள் தேவைதான்.அதற்காக முடிவற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
11 ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் கற்றவர்களிடமோ,உங்களுக்கு நெருங்கியவர்களிடமோ,உங்களைவிட அத்துறையில் விவரமாய் இருப்பவர்களிடமோ யோசனை கேட்கத் தயங்க வேண்டாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்ல யோசனைகள்... நன்றி...

Post a Comment