உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சரியான நேரம்

3

Posted on : Friday, November 16, 2012 | By : ஜெயராஜன் | In :

மன நலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கடிகாரத்தில் பன்னிரண்டு காட்டியது.அதைப் பார்த்து ஒருவர் சொன்னார்,''இப்போது நடுப்பகல் 12மணி.''அடுத்தவர் சொன்னார்,''இல்லை,இல்லை,இப்போது நடு இரவு 12 மணி.''இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சப்தம் கேட்டு வார்டன் அந்தப் பக்கம் வந்து என்னவென்று கேட்டார்.அவர்கள் இப்போது பகல் 12 மணியா,இரவு 12 மணியா என்று கேட்டனர்.அவர் உடனே தனது கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, ''எனது கடிகாரம் ஓடவில்லையே!எப்படி சொல்வது?''என்றார்.அங்கேயே வேலை பார்த்து அவருடைய மனநிலையும் அப்படித்தான் ஆயிற்று போலும்!
********
அப்பா:மகனே,வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவேன் என்று சொல்கிறாயாமே,அம்மா சொல்கிறாள்!
மகன்:ஆமாம்,இப்ப அதுக்கென்ன?
அப்பா:இல்லை.எப்பவென்று சொன்னால் நானும் உன் கூட வந்து விடலாமே என்று பார்க்கிறேன்.
********
சொர்க்கத்திற்கு வந்து சேர்ந்த ஒருவன் அந்த சூழ்நிலையைப் பார்த்துவிட்டு மிக மகிழ்ச்சியாக இருந்தான்.அடிக்கொரு தடவை,''எத்தனை அமைதி, எவ்வளவு நிம்மதி!,''என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.திரும்பத் திரும்ப அதைக்கேட்டு புளித்துப் போனதால் சொர்க்கத்தின் தலைவன் அவனை நரகத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கும் அவன்,''எத்தனை அமைதி,எவ்வளவு நிம்மதி!''என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.சொர்க்கத்தின் தலைவனும் நரகத்தின் தலைவனும் ஒன்றும் புரியாமல்,''என்னடாஇது அதிசயம்!சொர்க்கமும் நிம்மதி,நரகமும் நிம்மதி என்கிறாயே,ஒன்றுமே புரியவில்லை''என்றனர்.அவன் சொன்னான்,''பூலோகத்தில் என் மனைவியுடன் 50 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள்!''
********
மனைவியின் மீது சந்தேகம் கொண்ட ஒருவன் ஒருநாள் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தான்.அவன் மனைவி அப்போது கட்டிலில் படுத்திருந்தாள். அவனுக்கு ஏதோ அவள் தவறு செய்கிறாள் என்று தோன்றவே அவளை திட்ட ஆரம்பித்தான்.அதற்கு மனைவி ,''நீங்கள் என்னை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.இதையெல்லாம் மேலேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவனுக்குதான் உண்மை தெரியும்,''என்று கூறி அழுதாள் .கணவனுக்கே சிறிது இரக்கம் தோன்றியது.அப்போது மேலே பரணிலிருந்து ஒருகுரல் கேட்டது,''எனக்கு ஓரளவுதான் தெரியும்.கட்டிலுக்கு கீழே இருப்பவனிடம் கேட்டால் முழு விபரம் தெரியும்.''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

haaa haaa

ஹா.... ஹா... அனைத்தும் கலக்கல் சார்...

தினப்பதிவு திரட்டிக்கு நன்றி.
ஊக்கம் கொடுக்கும் தனபாலனுக்கும் சீனிக்கும் நன்றிகள்.

Post a Comment