உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சஞ்சீவினித் தைலம்

1

Posted on : Tuesday, November 20, 2012 | By : ஜெயராஜன் | In :

சாலையில் ஒரு மனிதன் பாட்டில்களில் பச்சை நிறத்தில் திரவியம் நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிறுவன் உதவி செய்து கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது. வியாபாரி சுற்றிலும் இருந்தவர்களிடம்,''இது ஒரு சஞ்சீவினித் தைலம்.இதை சாப்பிட்டால் பல நூறாண்டுகள் வாழலாம்.என்னைப் பாருங்கள்!நான் தினமும் ஒரு பாட்டில் அளவு இதைக் குடிக்கிறேன்.என் வயது இப்போது எழுநூறு,''என்றான்.எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். யார் முகத்திலும் நம்பிக்கையின் ரேகை கூட இல்லை. கூட்டத்தில் ஒருவன் மெதுவாக வியாபாரியுடன் கூட இருந்த சிறுவனை மெதுவாகத் தள்ளி அழைத்துச் சென்று,''அந்த ஆள் சொல்வது உண்மையா? அவருக்கு வயது எழுநூறா ?''என்று கேட்டான்.அந்தப் பையன்,''என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது,''என்றான்.உற்சாகம் அடைந்த அந்த நபர்,''உண்மையைச் சொன்னால்  உனக்கு நான் ஒரு பரிசு தருவேன்,''என்றான் .அந்த சிறுவன் சொன்னான்,''நான் அவரிடம் முன்னூறு ஆண்டுகளாகத்தான் வேலை செய்கிறேன்.அதனால் அவரின் உண்மையான வயது எனக்குத் தெரியாது,''வியாபாரியை விடப் பெரிய எத்தன்!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

விவரமான சிறுவன்...!

Post a Comment