உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மயக்க மருந்து

3

Posted on : Friday, November 09, 2012 | By : ஜெயராஜன் | In :

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்க மருந்தின் வீரியம் குறையாத நிலையில் இருந்த கணவன் அருகில் மனைவி வந்தாள்.சிறிது  மயக்கம் குறைந்ததும்  லேசாகக் கண் விழித்த கணவன் மனைவியைக் கண்டதும்,''நீ மிக மிக அழகாய் இருக்கிறாய் ''என்றான்.அந்த நிலையிலும் தனது  அழகை கணவன் புகழ்ந்ததில் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி.அரை மயக்கம் தெளிந்த நிலையில் மீண்டும் கண் விழித்த கணவன்,''இன்று நீ பரவாயில்லாமல் இருக்கிறாயே.''என்று மனைவியிடம் சொன்னான்.அவள் டாக்டரிடம்  ,''முதலில் என்னை மிக அழகாக இருப்பதாக சொன்ன அவர் இப்போது பரவாயில்லை என்று குறைத்து மதிப்பிடுகிறாரே,''என்று அங்கலாய்த்தாள். டாக்டர் சொன்னார்,''மயக்க மருந்தின் குணம் குறையக் குறைய அவருக்கு நிதானம்  அதிகமாகும்,''என்றார்.
********
ஒரு செய்தி வந்தால் ஒரு ஆண் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுவான்.அதே சமயம் ஒரு பெண் ஒரு செய்தியை இரு காதிலும் வாங்கி வாய் வழியே வெளிவிடுவாள்.
********
தனது பக்தனின் பக்தியை மெச்சிய இறைவன் ,''உனக்கு என்ன வேண்டுமானாலும்  கேள்.உடனே கொடுக்கிறேன்.ஆனால் உன் எதிரியான பக்கத்து வீட்டுக்காரனுக்கு அதுவே இரண்டு மடங்காகக் கிடைக்கும்,''என்றார்.உடனே பக்தனும் தனக்கு ஒரு அழகிய வீடு கேட்டான்.அவனுக்கு ஒரு வீடும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு வீடும் கிடைத்தது.அடுத்து பக்தன் ஒரு விலை உயர்ந்த கார் கேட்க அவனுக்கு ஒன்றும் அவன் எதிரிக்கு இரண்டு காரும் கிடைத்தன.கடுப்பான பக்தன்,''என்னுடைய ஒரு சிறு நீரகத்தை நான் தானமாகக் கொடுக்க வேண்டும்,''என்றான்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

நல்ல ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

1 ஹா... ஹா...

2 உண்மை...

3 என்னவொரு வேண்டுதல்...!

சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது

Post a Comment