உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கேள்வி-பதில் 2

2

Posted on : Friday, November 30, 2012 | By : ஜெயராஜன் | In :

கேள்வி:நான் மிக நல்லவன்.யாரையும் நான் கெடுக்க விரும்புவதில்லை. ஆனாலும் எனக்கேன் எல்லோரும் தொல்லை கொடுக்கிறார்கள்?
பதில்:வாழ்க்கையில் எவ்வளவோ போட்டிகள் வரும்.அதற்கு ஈடு கொடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:நான் எண்ணியபடி நடக்காவிடில் என் வாழ்க்கையே வீணாகி விடுமே?
பதில்:வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்,என்று அளவுகோல் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.அது ஒரு குறுகிய கண்ணோட்டம் ஆகும். வாழ்க்கையை அதன் வழியிலேயே நடத்துங்கள்.
********
கேள்வி:என் மீது யாருக்கும் இரக்கமும் இல்லை,அனுதாபமும் இல்லை.
பதில்:மற்றவர்கள் நமக்கு கடன் பட்டவர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது.அந்த எண்ணத்தை முதலில் களையுங்கள்.யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளக் கூடாது.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும்.
********
கேள்வி:என்னை ஒருவர் தாழ்த்திப் பேசினால் அதை நான் பொறுப்பதா? அல்லது சாவதா?
பதில்:பிறருடன் சம்பந்தப்படும் எந்த செயலும் விமரிசனத்திற்கு உட்பட்டதே.விமரிசனங்களை ஆராய்ந்து சரியாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும்,தவறாக இருந்தால் அதை மறக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:நான் பிறர் மீது அளவு கடந்த பாசம் வைப்பதால் கோபப்பட்டு விடுகிறேன்.
பதில்:உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாததால் வரும் ஆதங்கம்தான் இது.
********
கேள்வி:நான் எக்காரணத்தைக் கொண்டும் எனது கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
பதில்:மற்றவர்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணமும் வீண் பிடிவாதமும்தான் ஒவ்வொருவரும் இவ்வாறுஎண்ணக் காரணம்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

ஒவ்வொரு பதிலும் அருமை... நன்றி...

நன்றி.இந்த மாதிரியான இடுகைகள் படிப்பதற்கு சற்று சிரமமாகத் தெரியலாம்.எத்தனை பேருக்கு இதில் ஆர்வம் இருக்குமோ,தெரியவில்லை.

Post a Comment