உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடி

2

Posted on : Thursday, November 29, 2012 | By : ஜெயராஜன் | In :

''பட்டப்பகலில் நடுத்தெருவில் அநியாயம்!என்னால் பார்க்கப் பொறுக்கலை.''
'நீங்க அதற்கு என்ன செஞ்சீங்க?'
''கண்ணை மூடிக்கிட்டே அந்த இடத்தை அவசரமாய்க் கடந்து வந்து விட்டேன்.''
********
''கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி இருக்குங்க...''
'அப்படியா?எந்த சாமியைக் கும்பிடப் புறப்பட்டீங்க?'
''ஆஞ்சநேயர் சுவாமியைத்தான்.''
********
''என்ன மாப்பிள்ளே,நான் வாங்கிக் கொடுத்த தொலைக் காட்சிப் பெட்டியை விற்று விட்டீங்களாமே?''
'நீங்கதானே மாமா,என் பெண்ணை  கண் கலங்காமப் பார்த்துக்கோன்னு சொன்னீங்க!''
********
''நாலு நாளாய் தூக்கமே இல்லையே,டாக்டர்!''
'ஆபீசுக்கு லீவு போடாதேங்கன்னு சொன்னா கேட்டால்தானே!'
********
''ஏண்டா,பேயறைஞ்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்கே?''
'அடப்பாவி,என் மனைவி என்னை அடிச்சதை எப்படி கண்டு பிடிச்ச?'
********
டாக்டர்:உங்க உடம்பு எடை குறையணும் என்றால் தினமும் நாலு கிலோமீட்டர் தூரமாவது நடக்க வேண்டும்.
நோயாளி:'நடக்குற' காரியமா சார் அது?
********
''அந்த நோயாளி அபாயக் கட்டத்தைத் தாண்டி பேச ஆரம்பிச்சிட்டார்.''
'அப்புறம்?'
''டாக்டரோட பில்லில் இருந்த அபாய கட்டணத்தை தாண்ட முடியாமல் திரும்ப கோமா நிலைக்குப் போய்விட்டார்.''
********
பத்திரிகை ஆசிரியர்:உங்க கதையிலே நடை சரியில்லையே?
எழுத்தாளர்:அதான்,கதாநாயகனுக்கு ஒரு கால் நொண்டியாச்சே!
********
''என் மனைவிக்கு கோபம் வந்தால் எடுத்தெறிஞ்சு பேசி விடுவாள்.''
'பரவாயில்லையே,என் மனைவிக்குக் கோபம் வந்தால் என் மேலே எதையாவது எடுத்து எறிஞ்சு அப்புறம்தான் பேசுவாள்.'
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

ஹா ஹா ஹா....
சிரித்தேன் ரசித்தேன்

ஹா...ஹா... செம கடி...

Post a Comment