உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

திருமண ஆசை

2

Posted on : Friday, November 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.உடனே ஒரு தரகரை அணுகினான்.அவரும் சொன்னார்,''ஒரு அழகான பெண் இருக்கிறாள்.பணம் அவளிடம் நிறைய இருக்கிறது. என்ன, உன்னை விட வயது கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.அவள் ஒரு விதவை.''அவனும் சம்மதித்து பெண்ணைப் பார்க்கப் போனார்கள்.பெண்ணைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி.அந்தப் பெண் மிக அவலட்சணமாக இருந்தாள். .மெதுவாக தரகரின் காதருகே சென்று அவன் மெல்லிய குரலில் கேட்டான்,''இந்தப் பெண்ணையா  அழகான பெண்  என்று சொன்னீர்கள்?'' தரகர் சொன்னார்,''எது வேண்டுமானாலும் சப்தம் போட்டே கேளுங்கள்.பிரச்சினை இல்லை.பெண்ணுக்கு சுத்தமாகக் காது கேட்காது.''
********
ஒரு பெண் ஓவியர் பிக்காசோவைப் பார்க்க வந்தாள்.அவள் அவரிடம்,''எனக்கு உங்கள் ஓவியங்கள் என்றால் உயிர்.எனக்கு உங்களது ஓவியங்கள் இரண்டு வேண்டும்.''என்று ஆர்வத்துடன் கேட்டாள் .பிக்காசோ உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து,''அம்மா,இப்போது ஒரு ஓவியம்தான் கைவசம் இருக்கிறது,''என்றார்.அந்தப் பெண்ணோ விடாப்பிடியாக,''எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை.எனக்கு இப்போது இரண்டு ஓவியங்கள் அவசியம் வேண்டும்,''என்றாள் .பிக்காசோ அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார்.அந்தப் பெண் ஓவியத்தில் அவ்வளவு விபரம் தெரிந்தவள் இல்லைஎன்று தெரிந்து கொண்டார்.ஆனால் ஜம்பத்திற்காக இரண்டு ஓவியங்கள் உடனே தேவையென்று கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு உள்ளே சென்றார்.தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை இரண்டாகக் கிழித்தார்.பின் வெளியே வந்து இரண்டையும் அவளிடம் கொடுக்க  அவளும் அதிகப் பணத்தைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்துசென்றாள் .
********
ஒருவன் தனது நண்பனிடம் கவலையுடன் சொன்னான்,''தினசரி கனவினில் பிரபலமான நடிகை............என் கனவில் வருகிறாள்.உடனே அலறிக்கொண்டு நான் எழுகிறேன்,''நண்பன் கேட்டான்,''அழகான அந்த நடிகை வந்தால் நீ மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்.நீ ஏன் அலறுகிறாய்?''அவன் சொன்னான்,''அவள் தினசரி என் அறைக்குள் வந்ததும் கதவைப் படீரென சாத்துகிறாள்.அந்த சப்தத்தில் நான் பயந்து அலறி விடுகிறேன்.''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

முடிவில் உள்ளது செம...

கலக்கல் பகிர்வு! நன்றி!

Post a Comment