உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சுயமரியாதை

1

Posted on : Sunday, November 04, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரபல ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு முறை இந்தியா வந்திருந்தார்.நண்பர்களுடன் கங்கை நதிக் கரைக்கு சென்றார்.மிக எதிர் பார்ப்புடன் வந்த அவர் கங்கை நீரைப் பார்த்துவிட்டு,''கங்கை நீர் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறதே?''என்று கேட்டார்.நண்பர்கள் விட்டுக் கொடுக்காமல் , ''பார்க்க அப்படித்தான் இருக்கும்.உங்கள் நாட்டு விஞ்ஞானிகளே இந்த நீரை சோதித்துப் பார்த்துவிட்டு இதில் எந்த நோய்க் கிருமியும் வாழ முடியாது என்று கூறி விட்டனர்,''என்றனர்.மார்க் ட்வைன் சிரித்துக் கொண்டே சொன்னார்,''சரிதான்.சுய மரியாதையுள்ள எந்த உயிர்க் கிருமியும் இதில் வாழ ஒத்துக் கொள்ளாது.''
********
விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்து பாராட்டியது.அந்த ஊர் மதுவுக்கு புகழ் பெற்றது.எனவே விருந்தில் மது தாராளமாகப் புழங்கியது.ஆனால் எவ்வளவோ வற்புறுத்தியும் ராமன் மது அருந்த மறுத்து விட்டார்.விருந்து முடிந்தவுடன் நண்பர்கள்,ராமன் மது குடிக்காமல் எப்படித் தப்பித்தார் என்று கேட்டார்கள்.அவர் சொன்னார்,''இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள்  மதுவில் 'ராமனின் விளைவு' எப்படியிருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.இன்று ராமனிடம் மதுவின் விளைவு எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்தார்கள்.''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

இரண்டும் அருமை...

நன்றி...

Post a Comment