உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எட்டாவது அதிசயம்

1

Posted on : Thursday, November 22, 2012 | By : ஜெயராஜன் | In :

காதலன்:கண்ணே,நீதான் உலகின் எட்டாவது அதிசயம்.
காதலி:மீதி ஏழு அதிசயங்களாக நீ கருதும் பெண்கள் யார்,யார்?
********
குடிகாரக் கணவனைப் பார்த்து மனைவி ஆதங்கத்துடன் சொன்னாள் ,''நீ குடிப்பதை விட்டுவிடு. அது கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் வியாதி.''
கணவன் அமைதியாக சொன்னான்,''நான் ஒன்றும் உடனே சாக வேண்டும் என்று நினைக்கவில்லையே !.மெதுவாகவே செத்துக் கொள்ளலாம்.
********
இரண்டு குடிகாரர்கள் நன்றாகக் குடித்துவிட்டு தள்ளாடி நடந்து வந்தனர். வழியில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது.நடந்து கொண்டே  கண்ணாடியில்  தெரியும் தங்கள் உருவங்களைப் பார்த்ததும் ஒருவன் சொன்னான்,''அதோ நிற்கிறார்களே, அவர்களை எங்கோ பார்த்த மாதிரித் தெரிகிறதே.நாம் அவர்களிடம் போய் பேசுவோமா?''அடுத்தவன் சொன்னான்,''அவசரப்படாதே!அவர்களே நம்மை நோக்கித்தான் வருகிறார்கள்.;;
********
ஒருவர் தனது வீட்டை மாற்றுவதற்காக தன்னுடைய பொருட்களை யெல்லாம் ஒரு திறந்த வேனில் ஏற்றினார்.வேன் கிட்டத்தட்ட நிறைந்து விட்டது.கடைசியாக தனது கிளியைக் கூண்டுடன் வைக்க இடம் பார்த்து,சரியான இடம் இல்லாததால் வேறு வழியின்றி எல்லாவற்றுக்கும் மேலே  தூக்கி வைத்தார் .போகும் வழியில் கிளிக் கூண்டு வேனின் ஆட்டத்தில் நழுவிக் கீழே விழுந்தது.உடனே வண்டியை நிறுத்தி கூண்டை எடுத்து மறுபடியும் மேலே வைத்து விட்டு வண்டி புறப்பட்டது.அந்த சாலை  சரியில்லாததால் வழி  நெடுக அந்தக் கூண்டு கீழே விழவும் அவர் எடுத்து வைப்பதுமாக இருந்தார்.ஆறாவது முறை கீழே விழுந்தபோது அதை எடுத்து வைக்க வந்தவரிடம் கிளி சொன்னது, ''அய்யா, போதும், நிறுத்துங்க! தயவுசெய்து நீங்க போற வீட்டு முகவரியை என்னிடம் கொடுத்து விடுங்கள்.நான் நடந்தே விசாரித்து அந்த வீட்டுக்கு வந்து சேர்கிறேன்.''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஹா... ஹா... நல்ல கேள்வி...!

மற்றவை 'கலக்கல்'...

Post a Comment