உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நம்பிக்கைதான்.

2

Posted on : Wednesday, November 14, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அந்தணர் தினசரி ஆற்றைக் கடந்து சென்று இறுதிக் கடன்களுக்கான சடங்குகளை செய்து தனது  வாழ்க்கையை நடத்தி வந்தார்.தேவையான அளவுக்கு வருமானம் வந்த போதிலும் அவர் எதுவும் செலவழிக்க மாட்டார்.சரியான கஞ்சன்.ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வேலைக்கு புறப்பட்டார்.அவர் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பணம் வருமே என்ற ஒரே எண்ணத்தில் அவர் கிளம்பி விட்டார்.போகும்போது கழுத்தளவு நீரில் சிரமப்பட்டு நடந்து அக்கறை போய் அன்றைய வருமானத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வரும்போது ஆற்றில் சகதியில் மாட்டிக் கொண்டார். அவருடைய அலறல் கேட்டு இரக்க குணம் உடைய ஒருவர் ஆற்றில் குதித்து அவரை சகதியிலிருந்து மீட்டார்.அவருக்கு நன்றி சொன்ன அந்தணர் திடீரென மறுபடியும் சகதியில் குதித்து விட்டார்.உதவி செய்த நபர்  இந்த அந்தணர் மன நிலை சரியில்லாதவரோ என்று எண்ணிக் கொண்டே அவரது சுபாவத்தினால்  மறுபடியும் அவரை சகதியில் இருந்து காப்பாற்றினார். கரைக்கு வந்ததும் அந்தணரிடம் மீண்டும் ஏன் சகதியில் குதித்தார் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்,''சகதியில் நான் மாட்டிக் கொண்ட போது போது இன்று நான் சம்பாதித்த நூறு ரூபாய் நோட்டு சகதியில் விழுந்து விட்டது.நீங்கள் நல்லவராய் தெரிவதால் மறுபடியும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மறுபடியும் குதித்து ரூபாய் நோட்டைக் கண்டு எடுத்து விட்டேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

என்ன ஒரு தைரியம் + நம்பிக்கை ...!

அட கொடுமையே!

Post a Comment