உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறிவீரா?

0

Posted on : Monday, November 14, 2011 | By : ஜெயராஜன் | In :

பகவான் ராமகிருஷ்ண பரம ஹம்சரின் இயற்பெயர் கடாதார் சட்டோபாத்யாயா.விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்.
**********
யானை தன துதிக்கையினால் ஒரு டன் எடையைத் தூக்க முடியும்.இதன் பலத்திற்குக் காரணம் துதிக்கையில் நாற்பதாயிரம் தசைகள் உள்ளன.
**********
சாம்பிராணி தேவதாரு மரத்தின் பாலிலிருந்து செய்யப்படுகிறது.
**********
மராட்டிய வீரர் சிவாஜியை ஆங்கிலேயர்கள் மலை எலி என்று வர்ணித்தனர்.
**********
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
**********
சிலருக்கு பேருந்தில் செல்லும்போது வாந்தி வரும்.ஏன்?நம் காதுகளுக்குள் லேப்ரிந்த் என்ற பகுதி இருக்கிறது.பேருந்து,விமானம் இவற்றில் செல்லும்போது நம்மைச் சுற்றிக் காற்றழுத்தம் மாறுகிறது.அப்படி மாறும்போது லேப்ரிந்தால் அதைத் தாங்க முடிவதில்லை.அது வாந்தியை வரவழைக்கிறது.
**********
தூங்குபவர்கள் தும்ம முடியாது.
**********
க்ரையோஜெனிக்ஸ் என்றால் என்ன?மிகக் குறைந்த வெப்ப நிலையில் பொருள்கள் என்ன மாறுதல் அடைகின்றன:அந்த மிகக் குறைந்த வெப்ப நிலையை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றிய விஞ்ஞானம்.இந்த முறைப்படி ஆவிகளை மிகக் குறைந்த வெப்ப நிலையில் திரவமாக்கி அதை ராக்கெட்டுகளில் உபயோகிக்கிறார்கள்.
**********
உடலில்  ஏற்படும் வலியை டால்ஸ் (DOLS)என்ற UNIT ஆல் குறிப்பிடுகிறார்கள்.பிரசவத்தின்போது ஒரு பெண் 9.5 டால்ஸ் வலியை அனுபவிக்கிறார்.ஒரு மனிதன் அதிக பட்சம் 9.5டால்ஸ் அளவு வலியைத்தான் தாங்க முடியும்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment