உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இந்தியரின் குணம்

0

Posted on : Thursday, November 17, 2011 | By : ஜெயராஜன் | In :

இந்தியர்கள் அடிமைத்தனத்தை சகித்துக் கொண்டார்கள்.ஆனால் யாரையும் அடிமையாக்கியதில்லை.மற்றவரை அடிமைப்படுத்த விரும்பினால் ஒழுங்குக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது.இந்தியர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபாடு காட்டியதில்லை.ஐயாயிரம் ஆண்டுகள் நிறைந்த வரலாற்றில் ஒரு மிகப் பெரிய இந்த சமுதாயம் ஒரே ஒரு ஜெங்கிஷ்கானைக் கூடத் தோற்றுவித்ததில்லை.அதை நம்மால் செய்ய முடியாது.ஆனால் நம்மால் ஒரு புத்தரை,ஒரு மகாவீரரை,ஒரு பதஞ்சலியை உருவாக முடிந்தது.அவர்கள் வித்தியாசமானவர்கள்.அவர்கள் ஒழுங்குக்  கட்டுப்பாட்டை உருவாக்க மாட்டார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா அடிமைப் பட்டுக் கிடந்தது.ஆனால் இந்தியா இன்னொரு நாட்டை வென்றதற்கு ஆதாரம் இல்லை.இந்தியாவின் ஒரு மாவட்ட அளவில் உள்ள இங்கிலாந்து கூட வென்றிருக்கிறது.இந்தியர்கள் போர் புரிவதில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள்.ஆனால் உண்மையில் இந்தியா எவராலும் எப்போதும் வீழ்த்தப்பட்டதில்லை.இந்தியர்கள் மற்றவர்களை வரவேற்றார்கள்.இந்த நாடு அமைதியானது.தேவையான உணவு இருந்தது.போதிய இடமும் இருந்தது.அமைதியை விரும்பிய மக்கள் ஆதிக்கத்தை விரும்பாமல் அடிமையாகக் கிடந்தார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment