உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உங்களுக்கே நல்லாயிருக்கா?

0

Posted on : Tuesday, November 15, 2011 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டியில் ஏறிய விருந்தாளி வழியனுப்ப வந்தவரிடம் குறை பட்டுக் கொண்டார்,''நான் ரயிலுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போனேன்.அப்போதே சொல்லியிருக்கலாம்.திரும்பி வந்து என் துணிகளை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்.அப்போது சொல்லியிருக்கலாம்.அப்புறம் குளித்துவிட்டு புறப்படுவதற்கு ட்ரெஸ் பண்ணினேன்.அப்போதாவது சொல்லியிருக்கலாம் .அப்போதும் கம்முன்னு இருந்தீங்க.அப்புறம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும்,'போய்வருகிறேன்,''என்று சொல்லி விடை பெற்றேன் .அப்போது கூட சொல்லியிருக்கலாம்.ஆனால் நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை.இப்போது ரயிலில் ஏறி ,வண்டி புறப்படக் கொடி அசைத்தவுடன் ,''இன்னும் இரண்டு நாள் நீங்கள் இருந்துட்டுப் போகலாமே''என்று சொல்கிறீர்களே,இது உங்களுக்கே நல்லாயிருக்கா?''
**********
வக்கீலின் வாதத் திறமையால் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றமற்றவர் என்று தீர்ப்புக் கூறினார்,நீதிபதி.வக்கீலுக்கு மகிழ்ச்சி.குற்றம் சாட்டப்பட்டவர் சற்று தயக்கத்துடன் கூண்டிலேயே நின்று கொண்டிருந்தார்.நீதிபதி ''ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?''என்று கேட்டார்.வக்கீல் சொன்னார்,''அவர் குற்றமற்றவர் என்று நீதிபதியிடம் விளக்கிப் புரிய வைத்த் விட்டேன்.அவர் குற்றமற்றவர் என்பதை இனிமேல்தான் அவரிடம் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment