உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சமயோசிதம்

0

Posted on : Monday, November 14, 2011 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.வெளியே கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்த ஒருவரின் விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது.அவர் பதறித் துடித்து படாதபாடு பட்டார்.இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் எதிர் சீட்டில் அமர்ந்து  பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.அவர் எந்த வித சலனமுமின்றி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அடுத்த ரயில் நிலையம் வந்தது.அவரைப் பார்க்க நிறைய அதிகாரிகள் வந்தனர்.அப்போது அவர் ஒரு அதிகாரியிடம் சொன்னார்,''இந்த இடத்திலிருந்து இருபது தந்திக் கம்பங்களுக்குப் பின்னால் ஒரு இடத்தில் இவரது விலை உயர்ந்த கைக் கடிகாரம் கீழே விழுந்து விட்டது.அதைத் தேடிக் கண்டுபிடித்து இவரிடம் சேர்ப்பித்து விடுங்கள்.''அந்தப் பெரியவர் ராஜாஜி. ஒரு பதட்டமான சூழ்நிலையில் சமயோசிதமாக அவர் செய்த காரியம் அங்கு  இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment