உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வைரக்கல்

0

Posted on : Monday, June 06, 2011 | By : ஜெயராஜன் | In :

கபீர் மிகச்சிறந்த ஞானியாக விளங்கியவர்.அவரது மகன் பெயர் கமால்.கபீர் எல்லாவற்றையும் உதறித் தள்ளியவர்.அவருக்கு இந்த உலகில் எதுவும் தேவைப்படவில்லை.யார் காணிக்கை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.ஆனால் அவர் மகன் கமால் ஏற்றுக் கொள்வார்.இது கபீருக்குப் பிடிக்கவில்லை.எனவே காணிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.கமால் கேட்டார்,''செல்வம் அர்த்தமற்றது என்றால் அதை வேண்டாம் என்று சொல்ல என்ன அவசியம் வந்தது?நாம் தேடிச் செல்ல வேண்டாம்.வந்தால் அதை வேண்டாம் என்று சொல்வதும் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றதுதானே?கபீருக்கு இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை எனவே தன மகனை வெளிய போகச் சொன்னார்.கமாலும் தனியாகச்சென்று ஒரு குடிசையில் தங்கினார்.
கபீரைக் காண வந்த காசி அரசன்,விபரம் கேள்விப்பட்டு கமாலைப் பார்க்கச் சென்று ஒரு விலை மதிப்பற்ற வைரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கினான்.''ஒரு கல்லை எதற்குக் கொண்டு வந்தாய்?''என்று கமால் கேட்க திகைத்துப்போன அரசன் அதைத் திரும்ப எடுத்துச் செல்ல முனைந்தான்.''அது கல்தானே?அதை எடுத்துச் செல்ல ஏன் சிரமம்?அப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று நீ நினைத்தால்,இப்போதும் நீ அதை விலை உயர்ந்த வைரம் என்றே எண்ணுகிறாய் என்று அர்த்தம்,''என்றார் கமால்.கமால் வைரத்தை வைத்துக் கொள்வதற்காக சாதுரியமாகப் பேசுவதாக எண்ணினான் அரசன்.''சரி,இதை எங்கே வைப்பது?''என்று  கமாலிடம் அவன் கேட்டான்.''எங்கே வைப்பது என்று கேட்பதனால்,இதன் மீது உனக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என்று பொருள்.ஆகவே வைப்பது என்ன,எங்காவது தூக்கி எறி,''என்றார் கமால்.அரசன் ஒன்றும் சொல்லாது வைரத்தை வாசலில் இருந்த பிறை இடுக்கில் சொருகினான்.கமால் அதை நிச்சயம் எடுத்துக் கொள்வார் என்று நம்பினான்.ஆறு மாதங்கள் கழித்து அவ்வழியே வந்த அரசன் கபீரைப் பார்த்து வணங்கி சிறிது நேரம் கழித்து வைரத்தை  கமால் என்ன செய்தார் என்று வினவ,கமாலுக்கு ஒன்றும்  புரியவில்லை.அரசன் உடனே வைரத்தைத் தான் வைத்த இடத்தில் தேட,அது அங்கேயே இருந்தது.கபீர் விருப்பு,வெறுப்பு,இச்சை,விரக்தி என்ற எல்லா நிலைகளையும் தாண்டிக் கடந்து விட்டார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment