உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது வேண்டும் ?

0

Posted on : Thursday, June 09, 2011 | By : ஜெயராஜன் | In :

கணவனும் மனைவியும் கடைவீதி சென்று ஆசைப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு தங்கள் காரில் வீட்டிற்கு வந்தனர்.இருவரும் களைப்புடன் இருந்ததால் காரிலிருந்து எதையும் இறக்காமல் காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு படுக்க சென்று விட்டனர்.காலையில் எழுந்து பார்த்தால் காரைக் காணோம்.சுற்றிமுற்றித் தேடி  பார்த்தும் கிடைக்காதலால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.தனக்கு பிடித்த பொருட்கள் மற்றும் சில ஆவணங்கள் காரில் இருந்ததால் மனைவி மிகவும் சோகத்தில் இருந்தார். கணவன் சொன்னான்,''அன்பே,எப்படியும் காரும் பொருட்களும் காணாமல் போய்விட்டன.இப்போது நம்முன் இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன.ஒன்று கார் போனதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது அல்லது அதை மறந்து மகிழ்வுடன் அடுத்த வேலையைப் பார்ப்பது நீ என்ன சொல்கிறாய்?''கணவனின் ஆறுதல் மனைவிக்கு இதமாக இருந்தது''மகிழ்வுடனே இருப்போம்,டார்லிங்,''என்றார்.
ஒரு மாதம் கழித்து கார் மட்டும் கிடைத்தது.ஆனால் முன் பகுதி இடித்து சேதம் ஆகி இருந்தது.டயர் ஒன்று வெடித்திருந்தது.கணவன் காரை இந்த நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்து,''இதை சரி செய்ய குறைந்தது இருபது ஆயிரம் ஆகுமே.எவ்வளவு அழகான வண்டி!இப்படி ஆகிவிட்டதே,''என்று புலம்பினான்.மனைவி சொன்னார்,''அன்பே,இப்போது நம்முன் இரு விஷயங்கள்தான் உள்ளன.ஒன்று,ஐயோ,கார் இப்படி ஆகி விட்டதே என்று கவலைப்படுவது அல்லது ஆனது ஆகட்டும்,இப்போது மகிழ்வுடன் அடுத்து காரியத்தை ஆரம்பிக்கலாம்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?கணவன் சிரித்துக்கொண்டே,''சந்தோசமாகவே இருப்போமே,''என்றான்.
எந்த சூழ்நிலையிலும் மகிழ்வுடன் இருப்பதோ,கவலையுடன் இருப்பதோ,உங்கள் சாய்ஸ்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment