உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பயிற்சி

0

Posted on : Saturday, June 18, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு படித்த பெண் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் வேலை தேடி விண்ணப்பித்து வந்தாள்.அவளுடைய தோழிகள் சொன்னார்கள்,''நீ இப்பொழுது தான் படித்து முடித்திருக்கிறாய்.உனக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை கொடுக்க மாட்டார்கள்.முதலில் சிறிய நிறுவனங்களில் வேலை பார்த்து அனுபவம் பெற்ற பின் பெரிய நிறுவனங்களுக்கு முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்''.ஆனால் அதையெல்லாம் அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.அங்கு பேட்டியின்போது ,''முன்  அனுபவம் உனக்கு ஏதுமில்லையே?''என்று கேட்டார்கள்.அதற்கு அவள் சொன்னாள்,''எனக்கு அனுபவம் இல்லை என்பதால்தான் உங்கள் நிறுவனத்திற்கு  வேலை தேடி வந்தேன்.அனுபவம்  பெற உங்கள் நிறுவனமே சிறந்தது.இங்கு கிடைக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது.சிறு நிறுவனங்களுக்கெல்லாம் போய்  என் திறமையை வீணடிக்க நான் விரும்பவில்லை.உங்கள் நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் கூட பயிற்சி பெறத்  தயாராக இருக்கிறேன்.''அவள் தன்னம்பிக்கைக்கு அந்த பெரிய நிறுவனத்திலேயே சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment