உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஈர்ப்பு

1

Posted on : Wednesday, June 08, 2011 | By : ஜெயராஜன் | In :

அரசன் ஒருவன் ஒரு வேலைக்காரியைக் காதலித்தான்.ஆனால் அந்த வேலைக்காரியோ ஒரு வேலைக்காரனைக் காதலித்தாள்.இது தெரிந்த அரசன் வேதனைப்பட்டு அவர்களைப் பிரிக்க,வேலைக்காரனை நாடு கடத்தலாம அல்லது சிறையில் அடைகலாமாஎன்று தன அமைச்சரிடம் கேட்டார்.
அமைச்சர் சொன்னார்,''பிரிவு என்றுமே ஆர்வத்தை ஆவேசமாகக் கிளரும்.இருவரும் தூர இருந்து ஒருவரை ஒருவர் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதனால்தான் இந்த ஈர்ப்பு.அருகருகே வைத்தால் ஈர்ப்பு தானே ஓடி விடும்.இரண்டு போரையும் நிர்வாணமாய் நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்குமாறு கட்டிப் போடுங்கள்,''என்றார்.அவ்வாறே செய்யப்பட்டது.இரண்டு நாட்கள் கழிந்ததும்  கட்டவிழ்க்கப்பட்டது.அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பாமல் வெவ்வேறு திசைகளில் ஓட்டம் பிடித்தனர்.
தேடிச்சென்று அடைவதில் உள்ள சுகம் அடைந்த பின்னர் இருப்பதில்லை.இன்றைய அதீத விருப்பம்தான் நாளைய வெறுப்பாகும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

உண்மை..வாழ்த்துக்கள்

Post a Comment