உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நல்லவர் ஆவது சுலபம்

1

Posted on : Thursday, June 23, 2011 | By : ஜெயராஜன் | In :

நாலு பேரிடம் நல்லவன் என்று பெயர் வாங்குவது ஒரு அரிய கலை.இதோ சில குறிப்புகள்:
*யாரைப் பற்றியாவது ஒரு பாராட்டு உங்கள் காதில் விழுந்தால் அதை உரியவரிடம் தெரிவிக்கத் தவறாதீர்கள்.முகஸ்துதியாக இல்லாமல் நிஜமான பாராட்டாக இருக்கட்டும்.
*அறிமுகமானவரின்  பெயரையோ முகத்தையோ அப்போதே மறந்து விடாதீர்கள்.அறிமுகமானவரிடம் அப்போதே அவர் பெயரை உச்சரித்துப் பேசுங்கள்.முகம்,பெயர் மறக்காமல் இருக்கும்.
*உரையாடலின்போது ஏதேனும் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே நாசூக்காகப் பேச்சை மாற்றி அனைவரின் கவனத்தையும் வேறு புறம் திருப்புங்கள்.மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
*யாரையும் நையாண்டி செய்து பேசுவது வேண்டவே வேண்டாம்.சிறிய நிலையில் இருப்பவரும் தம்மைப் பற்றி அவரே உயர்வாக நினைக்கும்படி  செய்யுங்கள்.
*உங்களிடம் கூறப்படும் ரகசியத்தை யாருக்கும் சொல்லாதீர்கள்.
*விவாதங்களின்போது உங்கள் தவறை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுங்கள்.அதனால் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.
*நண்பரிடம் அவரைப் பற்றியே அதிகம் பேசுங்கள்.'நான்','எனது'என்று உங்களைப் பற்றிய புராணம் வேண்டாம்.
*நீங்களே பேசிக் கொண்டிருக்காமல் எதிராளியை நிறையப் பேச விடுங்கள். உள்ளுக்குள் மகிழ்ச்சியோ துயரமோ எது இருந்தாலும்  வெளியே பண்புடன் நடந்து கொள்ளுங்கள்.
*அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள்.பிறகு,'மனம் புண் பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறிப் பயனில்லை.
                           How to develop your personility என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்ல தகவல்கள் தான்...

Post a Comment