உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காலடிச்சுவடு

0

Posted on : Sunday, June 05, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் இறந்த பிறகு கடவுளிடம் போனான்.கடவுள் வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையைக் காண்பித்தார்.அதில் நான்கு காலடிச்சுவடுகள் இருந்தன.''நீ போன இடங்களில் எல்லாம் நான் கூட வந்திருக்கிறேன் பார்,''என்றார் கடவுள்.ஆனால் நடுவில் கொஞ்ச தூரம் இரண்டு காலடிச்சுவடுகள் மட்டுமே இருந்தன.மனிதன் சொன்னான்,''துன்பத்தில் மட்டும் என்னைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டாயே,இறைவா!''சிரித்துக் கொண்டே கடவுள் சொன்னார்,''அந்த இரண்டு காலடிச்சுவடுகளும் என்னுடையவை.உன்னால் அத்துன்பத்தைத் தாங்க முடியாததால் நான் உன்னைச் சுமந்து கொண்டு சென்றேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment