உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொது இடத்தில்

0

Posted on : Monday, June 27, 2011 | By : ஜெயராஜன் | In :

நம் வீட்டில் இருப்பவர்கள் நமக்குக் கடமைப் பட்டவர்கள்.நம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்.பொது இடத்தில் நாம் சந்திக்கின்றவர்கள் அப்படியல்ல. இந்த  வித்தியாசத்தைப் பலர் உணர்வதேயில்லை.இதனால் பல தொல்லைகள் வந்து சேர்கின்றன.
பொது இடத்தில் ஒரு தவறு செய்துவிட்டு தன தவறை உணராமல் கத்துபவர்கள் உண்டு.அதாவது,பலர் முன்னிலையில் தாங்கள் அவமானப் பட்டுவிட்டோம்,அதைத் துடைக்க வேண்டும்,சப்தம் போட்டும் குரலை உயர்த்தியும் தம் தவறை நியாயப்படுத்த முடியும் என நம்பும் ரகத்தினர்  இவர்கள்.
பொது இடத்தில் அபமானத்தைத் துடைக்க ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மேலும் அவமானம் அடைகிறார்கள் என்பதுதான் உண்மை.
தனிப்பட்ட விசயங்களைக் காதும் காதும் வைத்த மாதிரி பேச வேண்டுமே தவிர,பொது இடத்தில் போட்டு உடைக்கக் கூடாது.
மொத்தத்தில் சொல்லப்போனால்,நம்மிடம் எவ்வளவு குணக் குறைபாடுகள்  இருந்தாலும் அது பொது இடத்தில் வெளிப்பட்டு விடக்கூடாது.
பொது இடத்தில் கூட முன்பின் தெரியாதவர்களையும் கவர்வதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்ற பாணியில் போய் விட வேண்டாம்.
                                                        --லேனா தமிழ்வாணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment