உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

'நொந்த'ஜோக்ஸ்

0

Posted on : Thursday, June 16, 2011 | By : ஜெயராஜன் | In :

''திருமணம் ஆனதும் கணவன் மனைவிக்கு எல்லா விஷயங்களிலும் 50-50 என்ற அடிப்படையில் தான்   இருக்க வேண்டும்''என்று தாத்தா கூறினார்.''இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா,தாத்தா?''என்று பேரன் கேட்டான்.''நீ அவளுக்கு  ஐம்பது ரூபாய்க்கு  ஒரு பொருள் வாங்கிக் கொடுத்தால் நீ உனக்கு ஐம்பது பைசாவுக்கு ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம்.''என்றார் தாத்தா.
**********
''என் மனைவிக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ,அப்போது மட்டும் தான் எனக்கு  முத்தம் கொடுப்பாள்,''
''அப்போ  உனக்கு அடிக்கடி முத்தம் கிடைக்கும் என்று சொல்!''
**********
''அவன் மனைவி மிக நல்லவள்.அவன் எவ்வளவு தாமதமாக வீட்டுக்கு சென்றாலும் அவள் அவனுக்கு கைலி.செருப்பு,சாப்பாடு,போர்வை எல்லாம் எடுத்துக் கொடுப்பாள்.''
''பின் ஏன் அவன் அவளைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்?''
''என்ன,கொடுப்பதையெல்லாம் அவள் தூக்கி அவன் மீது  எறிவாள்.''
**********
''என் மனைவி என்கிட்டேயிருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்.''
'உன் பாடு தேவலை.என் மனைவியும்தான் எல்லாவற்றையும் எடுத்துக்  கொள்கிறாள்.ஆனால் எங்கேயும் போக மாட்டேன் என்கிறாளே?'
**********
''பெண்கள் திருமணமானவர்கள் என்பது தெரிய தாலி அணிகிறோம்.  அதுபோல திருமணமான ஆண்களும் ஏதாவது அடையாளத்துக்கு  அணியலாமே?''
'அதுதான் நைந்துபோன பழைய உடைகளை அணிகிறோமே!'
**********'
''அப்பா,அம்மாவுக்கு பட்டுப் புடவை,அக்காவுக்கு சுடிதார்,அண்ணனுக்கு ஜீன்ஸ்,எனக்கு பைஜாமா எல்லாம் வாங்கப் போகிறோம்.உங்களுக்கு என்ன வாங்கிவர?''
'ஒரு காவி வேஷ்டி இருந்தால் வாங்கிவா.'
**********
ஆசிரியர் கேட்டார்,''உலகிலேயே பெரிய சர்வாதிகாரி யார் என்று தெரியுமா?''
மாணவன் சொன்னான்,'எங்க அப்பாவுக்குத் தெரியும்,'''அதெப்படி?''என்று ஆசிரியர் கேட்க,மாணவன் சொன்னான்,''அவரைத்தான் எங்க அப்பா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.'
**********
''என்ன இருந்தாலும் என்னைப்போல ஒரு  மனைவி உங்களுக்குக் கிடைக்கமாட்டாள்.''
'உன்னைப்போல ஒரு மனைவி வேண்டும் என்று எப்போது ஆசைப்பட்டேன்?''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment