உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விருந்தாளி

0

Posted on : Thursday, June 02, 2011 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவரைப் பார்க்க நீண்ட தூரத்திலிருந்து ஒருவர் வந்தார்.துறவி தங்கியிருந்த குடிலில் ஒரு பொருளும் இல்லை.வந்தவர் வியப்புடன் கேட்டார்,''உங்களுக்கென்று பொருள் எதுவும் கிடையாதா?''துறவி சிரித்துக்கொண்டே,''உங்கள் பார்வையில் அப்படித்தான் தோன்றும்.பரவாயில்லை,அதே கேள்வியை நான் உங்களிடம் இப்போது கேட்கலாம் அல்லவா?ஏனெனில் உங்களிடமும் தற்போது எந்தப் பொருளும் இல்லையே?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''நான் உங்களைத் தேடி வந்த விருந்தாளி.இங்கு சிறிது நேரம் மட்டுமே இருப்பேன்.அதனால் நான் எதையும் கொண்டு வரவில்லை.''துறவி இப்போது சொன்னார்,''அன்புக்குரியவரே!உங்களைப்போலத்தான் நானும் இவ்வுலகிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறேன்.நானும் சிறிது காலம் தான் இங்கே இருப்பேன்.எனவே எதற்கு தேவையில்லாத பொருட்கள்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment