உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கோபம் சரியாக

0

Posted on : Wednesday, June 15, 2011 | By : ஜெயராஜன் | In :

'கோபத்தைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்,''என ஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.ஞானி சொன்னார்,''ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதில்லை இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ,எனக்கு இது சாதகமா,பாதகமா என்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறீர்கள்.நீங்கள் கோபப்படுவது உங்களுக்கு பாதகத்தைத் தரும் என்று கருதினால்,அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகி விடுகிறீர்கள்.கோபப்படுவதால் எந்த பாதகமும் வராது என்று தெரிந்தால்,அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாக நம்மைப் பேசினால் கூட கோபம் பொங்குகிறது.எனவே உங்கள் கோபம் உங்கள் தர்க்கம் சம்பந்தப்பட்டது.உங்கள் தர்க்கத்தை சரி செய்யுங்கள்.உங்கள் கோபம் தன்னால் சரியாகும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment