உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முல்லாவின் கழுதை

0

Posted on : Monday, June 27, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் கழுதை காணவில்லை.முல்லாவிற்கோ ஒரே வருத்தம்.நண்பர்கள் கேட்டார்கள்,''என்ன முல்லா,ஒரு கழுதைக்காக  இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் ? உங்கள்  மனைவி இறந்தபோதுகூட  இவ்வளவு துக்கப்படவில்லையே!''முல்லா சொன்னார்,''நண்பர்களே,என் மனைவி இறந்தபோது,நீங்களெல்லாம்,கவலைப்படாதே,வேறு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொன்னீர்கள்.ஆனால் இப்போது உங்களில் ஒருவர் கூட,இந்தக் கழுதை போனால் போகிறது,இன்னொரு கழுதை வாங்கித்தருகிறோம்,என்று கூறவில்லையே?''நபர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment