உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாதம்

0

Posted on : Wednesday, June 01, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஷயத்தைப்பற்றிய உண்மையை அறிந்து கொள்ள மக்கள் வாதம் செய்வதுண்டு.வாதம் மூன்று வகைப்படும்.
விதண்டாவாதம்: தங்கள் கருத்து என்னவென்று சொல்லாமல் எதிராளியின் கருத்து தவறு என்று நிரூபிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதுதான் விதண்டாவாதம்.எதிராளியைத் தோற்கடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதுதான் குறி.உண்மையைத் தெரிந்து கொள்வதில் துளிக்கூட ஆர்வம் இருக்காது.
ஜல்பம் : எதிராளியின் கருத்து என்னவென்று அறிய விரும்பாமல் தன கருத்தை மட்டுமே வலியுறுத்திக் கூறுவதே ஜல்பம்.
வாதம் :தன்னைக் கெட்டிக்காரன் ஆகக்  காட்டிக் கொள்ளவோ,எதிராளியை மட்டம் தட்ட வேண்டும் என்பதோ நோக்கம் அல்ல.உண்மையை அறிவதுதான் குறிக்கோள்.எதிராளியின் கருத்து சரி என்று நிரூபிக்கப்பட்டால் அதனால் வருத்தம் அடையாது,தான் தோற்றதற்குக் கவலைப்படாமல் உண்மையை அறிந்து கொண்டோமே என்று மன மகிழ்வு ஏற்படும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment