உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நீ நீயாக இரு.

0

Posted on : Sunday, June 19, 2011 | By : ஜெயராஜன் | In :

'இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரரின் தலை மீது கைவைத்துத் தடவி ஆசிர்வாதம் செய்ததும் அவர் விவேகனந்தர் ஆனார்,'என்பதனைப் படித்துத் தெரிந்த ஒருவர் விநோபாஜியிடம் சென்று ,''அய்யா,தாங்கள் என் தலை மீது கைவைத்து ஆசிர்வாதம் செய்தால் நான் சங்கராச்சாரியார் ஆகிவிடுவேன்.தயை புரியுங்கள்,''என்று சொன்னார்.அதற்கு வினோபாஜி  சொன்னார்,''நான் ஆக்குவதால் நீ ஆகிவிட்டால்,பிறர் அழிப்பதால் நீ அழிந்தும்  போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் தவ வலிமை மிகுந்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை எதாகிலும் ஆக்கினால் நீ அப்படி ஆகிவிடாதே.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment