உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஊமையா?

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

அந்தப்  பையன் எட்டு வயதாகும் வரை வாய் திறந்து பேசியதில்லை.எந்தெந்த டாக்டர்களிடமோ காட்டியும் எந்தப் பயனுமில்லை.ஒரு நாள் ஒரு இரவு விருந்தில் அந்தப் பையனுடன் அவன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.தன்னுடைய தாயாரின் பக்கம் அமர்ந்திருந்த  அந்தப் பையன் திடீரெனக் கேட்டான்,''அம்மா!அந்த உப்பைக் கொஞ்சம் எடு!''எல்லோருக்கும் ஆச்சரியம்.பையனின் தந்தை கேட்டார்,''இதுவரை நீ ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசினதில்லை.நாங்கள் கூட ஊமை என்றல்லவா நினைத்தோம்!''பையன் சொன்னான்,''இதுவரை எல்லாமே சரியாக இருந்தது.இன்றுதான் உணவில் உப்பு குறைந்திருந்தது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment