உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யார் காரணம்?

0

Posted on : Monday, June 06, 2011 | By : ஜெயராஜன் | In :

அன்பே உருவான வயதான தம்பதியினர்,வெளியூரில் வசிக்கும் மகனைப் பார்க்க மலைப் பகுதி வழி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினார்கள்.இறங்க வேண்டிய நிறுத்தத்தில் அவர்களை மட்டும் இறக்கி விட்டு பேருந்து கிளம்பிச் சென்றது..போகும் வழியில் மலையில் இருந்து உருண்டு வந்த ஒரு பெரிய பாறை பேருந்தின் மேல் விழுந்து பேருந்து நசுங்கி பயணிகள் அனைவரும் அந்த இடத்தில் இறந்து போனார்கள்.இச்செய்தி வயதான தம்பதியினருக்குத் தெரிய வந்தது.''நல்ல வேலை,நீங்கள் முன்னரே இறங்கியதால் தப்பித்தீர்கள்,''என்றார் ஒருவர்.பெரியவர் சொன்னார்,''நாங்கள் இறந்காதிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது.அனைவரும் தப்பித்திருப்பர்.''கேட்டவருக்கு  ஆச்சரியம்.''ஏன் அப்படி சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.பெரியவர் வருத்தத்துடன் சொன்னார்,''பேருந்து எங்களுக்காக சிறிது நேரம் ஓரிடத்தில் நின்றதே.அப்படி நிற்காது தொடர்ந்து சென்றிருந்தால் அந்தப் பாறை விழுந்த நேரத்தில் அந்தப் பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்குமே?எவருக்கும் எதுவும் ஆகி இருக்காதே.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment