உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மதிப்பு ,மரியாதை

1

Posted on : Friday, June 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நிறுவனத்தில் முப்பது வயதை ஒட்டிய அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது.அப்போது வகுப்பு எடுத்தவர் சொன்னார்,''உங்களுக்கு சிலர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கும்.ஆனால் இதை நீங்கள் சரியான முறையில் வெளிப்படுத்தாமல் உங்கள் உறவு இறுக்கமாக இருக்கக் காரணமாகி விடுகிறீர்கள்.இதை நீங்கள் முயற்சி செய்து பார்த்துவிட்டு அதன் பலனை அடுத்த மாத வகுப்பில் சொல்லலாம்,''அடுத்த வகுப்பில் யாருக்காவது இது சம்பந்தமான அனுபவம் ஏதாவது ஏற்பட்டதா என்று விசாரித்தார்.அப்போது ஒருவர் சொன்னார்,''நீங்கள் இந்த விஷயத்தை சென்ற வகுப்பில் சொன்னபோது எனக்கு முட்டாள்தனமாகப் பட்டது.உங்கள் மீது எரிச்சல் கூட ஏற்பட்டது.ஆனாலும் நான் அதை முயற்சி செய்து பார்க்க விரும்பினேன்.எனக்கு என் தந்தையின் மீது மிக்க மதிப்பும் மரியாதையும் உண்டு.ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் நான் அவரைப் பார்ப்பதும் இல்லை பார்த்தால் பேசுவதும் இல்லை.இப்போது அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பை தெரியப்படுத்த விரும்பினேன்.அன்றே அவருக்கு தொலைபேசி மூலம் அவர் வீட்டிற்கு வருவதாகச் சொன்னேன்.அவர் கோபத்துடன் எதற்கு வருகிறாய் என்று கேட்டார்.நானும்,'உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் அலுவல் முடிந்ததும் மாலை ஆறு மணிக்கு வருகிறேன்,'என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டேன்.மாலை ஆறு மணிக்கு மனம் திக் திக் என்று அடிக்க என் தந்தை இருந்த வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினேன்.என் தந்தையே வந்து கதவைத் திறந்தார்.அவர் முகம் இறுக்கமாக இருந்தது.நான் வந்ததை விரும்பாததுபோல அவருடைய தோற்றம் இருந்தது.அப்போது நான் சற்றும் அவர் எதிர்பாராத வண்ணம்,'அப்பா,நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.உங்கள் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.இதை சொல்லத்தான் வந்தேன்' என்றேன்.உடனே அங்கு ஒரு அதிசயம் நடந்தது.என் தந்தையின் முக இறுக்கம் படிப்படியாய்க் குறைந்து முகத்தில் ஒரு புன்முறுவல்  தோன்றியது.உடனே அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,'நானும் உன்னை மிக நேசிக்கிறேன்.ஆனால் அதை சொல்லத்தான் எனக்கு இதுவரை தெரியவில்லை,'என்றவர் என்னை நீண்ட  நேரம் விடாமல் அணைத்தபடியே இருந்தார்.இக்காட்சியை என் தாய் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.அதன்பின் இரண்டு நாட்களில் என் தந்தை மாரடைப்பால் காலமாகி விட்டார்.நான் மட்டும் அன்று அவரைப் பார்க்காமல் இருந்திருந்தால் வாழ் நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் இருந்திருப்பேன்.உங்களுக்கு என் நன்றி,''என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

கமென்ட்ஸ் போடுவது கடினமாக இருக்கிறது.

Post a Comment