உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது?எது?

0

Posted on : Tuesday, June 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ரிபு என்று  ஒரு தத்துவ ஞானி இருந்தார்.நிதாகர் என்பவர் அவருடைய சீடர்.சீடருக்கு எல்லாக் கலைகளையும்  சொல்லிக் கொடுத்தபின்னும் உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு  வரவில்லை.ஞானி சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா  என்று சோதனை செய்வதுண்டு.ஒரு முறை ஞானி ஒரு ஊருக்கு சென்றிருந்தபோது ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.அரசன் தன பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அந்த சாலையில் சீடன் நிதாகர் தர்ப்பைப்புல்லுடன் ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பதைக் கவனித்தார்.உடனே அவரிடம் சென்று,''என்ன இங்கு நின்று கொண்டிருக்கிறீர்?''என்று கேட்டார்.சீடருக்கு குருவை அடையாளம் தெரியவில்லை.என்றாலும்''ராஜா ஊர்வலம் போகிறதே,அதனால் நிற்கிறேன்,''என்றார்.''எது ராஜா ஊர்வலம்?''என்று குரு  கேட்டார்.''
''அதுதான் போய்க்கொண்டிருக்கிறதே?''-இது பதில்
''அதில் யார் ராஜா?''-குருவின் கேள்வி.
;;யானை மேல் போகிறவன்,''-சீடரின் பதில்.
 ''யானை எது?''மீண்டும் குரு கேட்டார்.
''கீழே இருப்பது யானை,மேலே இருப்பது ராஜா.''
''கீழ் எது,மேல் எது?என்று குரு கேட்டவுடன் நிதாகருக்குக்  கோபம் வந்து அவரைக் கீழே தள்ளி அவர் மேல் ஏறி உட்கார்ந்து,''நீதான் கீழ்,நான்தான் மேல்.''.என்றார்.அதற்கு குரு சிரித்தபடி நிதானமாக,''அது சரி,நீ எது,நான் எது?''என்றவுடன் சீடருக்கு வந்திருப்பது தன குரு என்பது புரிந்துவிட்டது.சீடருக்கு ஆன்மீக அனுபவம் கிட்டியது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment