உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒவ்வொரு நாளும்

0

Posted on : Thursday, June 23, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொரு நாளும் நாம் நமக்குள் சொல்லிக் கொள்ள வேண்டியவை:
*நான் இன்று மகிழ்ச்சியாக இருப்பேன்.
*நான் இன்று யாருக்காவது ஒரு நன்மை செய்வேன்.
*நான் இன்று நன்கு உடுத்தி அனைவரிடமும்  இன்முகத்துடன் நடந்து கொள்வேன்.
*நான் இன்று கனிவுடன் பேசுவேன்;கண்டிக்க மாட்டேன்.
*நான் இன்று பாராட்டுவேன்;பழிக்க மாட்டேன்.
*நான் இன்று என்னைத் திருத்திக் கொள்வேனே தவிர,யாரையும் திருத்த முயல மாட்டேன்.
*நான் இன்று செய்ய வேண்டியதை தள்ளிப் போடாமல் செய்வேன்.
*நான் இன்று ஒவ்வொரு மணிக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவேன்.இது பரபரப்பையும் குழப்பத்தையும் குறைக்கும்.
*நான் இன்று அரை மணி நேரம் தியானம் செய்வேன்.
*நான் இன்று எல்லோரிடமும் அன்பாக இருப்பேன்.எல்லோரும் என்னிடம் அன்பாக இருப்பதாக நம்புவேன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment