உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்--18

0

Posted on : Saturday, June 11, 2011 | By : ஜெயராஜன் | In :

தன செயலுக்குத்  தானே சிரிக்காதவன் \
மற்றவர்களிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுகிறான்.
**********
'என் அபிப்பிராயத்தை சொல்லவா?'என்று யாரேனும் ஆரம்பித்தால் நிச்சயம் அவர் உங்கள் கருத்துக்கு மாறான கருத்தை சொல்லப் போகிறார் என்று பொருள்.
**********
தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி
தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது
பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.
**********
நமக்கு எது வசதி என்பதில்
எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.
**********
நகைச்சுவை உணர்வு நிரம்பிய மனிதன்,மென்மையான இலவம் பஞ்சு அடைத்த தலையணை போன்றவன்.அவனும் லேசாக இருப்பான்.அடுத்தவருக்கு இதமாகவும் இருப்பான்.
**********
தைரியம் என்பது அச்சம் இன்றி இருப்பது அல்ல.பயந்தபின்,
அந்த நிகழ்வை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான்.
**********
பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
**********
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும்  அனுபவித்து விடுங்கள்.
நாளை,ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.
**********
நீங்கள் வயதாவதால் சிரிப்பை நிறுத்துவதில்லை.
நீங்கள் சிரிப்பை நிறுத்துவதால்தான் வயதானவராகிறீர்கள்.
**********
கற்பனைதான் மிக உயரத்தில்  பறக்கக்கூடிய பட்டம்.
**********
பொய் சொல்வது என்பது
ஒரு சிறுவனைப் பொறுத்த மட்டிலும் அது தவறு;
ஒரு காதலனைப் பொறுத்த மட்டிலும் அது ஒரு கலை.
ஒரு மணமானவனைப் பொறுத்த மட்டிலும் அது இயற்கை.
**********
ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன்
கொலைகாரனுக்கு சமமாவான்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment