உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஔவையார்

0

Posted on : Sunday, June 05, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒளவையாரின் எளிய பாடல்களில் சில;

கொடிது கொடிது வறுமை கொடிது.
அதனினும் கொடிது இளமையில் வறுமை.
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்.
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்.
அதனினும் கொடிது இன்புற அவர் கையில் உண்பதுதானே.
**********
பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை யுண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்.-சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயிற்
கூறாமல் சன்னியாசம் கொள்.
**********
இனிது இனிது ஏகாந்தம் இனிது.
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினு நனவினும் காண்பதுதானே.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment