உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

துடிப்பு

0

Posted on : Saturday, June 11, 2011 | By : ஜெயராஜன் | In :

புகழ் பெற்ற ஜப்பானியத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு ஜென் துறவியை அழைத்திருந்தார்.துறவி வந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அவற்றைப்  பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்.துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை.முடிவில் துறவி,அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட,வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு  கிண்ணத்தைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தார்.அதைக் கண்ட தளபதியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கோபத்தில் துடித்துக் கத்த ஆரம்பித்தார். துறவி அமைதியாகச் சொன்னார்,''உன் கண் முன்னாள் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்கியதை உன் மனத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வேதனையுடன் போர்க்களங்களில் வலியுடன் இறந்து போயின? உன் கண் முன்னே எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?அப்போது ஏன்  உன் மனது துடிக்கவில்லை?''தளபதிக்குத் தன அறியாமையும் இயல்பும் புரிந்து விடவே தானும் துறவியானார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment